சென்னை வேளச்சேரியில் மாநகர பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.. அலறிய பயணிகள்.. 7 பேர் காயம்
சென்னை: சென்னை வேளச்சேரியில் 2 மாநகரப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. வேளச்சேரி தாண்டீஸ்வரம் பகுதியில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் டிரைவர் மற்றும் பயணிகள் 7 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை வேளச்சேரி பகுதி எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் பகுதிகளில் ஒன்றாகும். இந்த நிலையில் வேளச்சேரி தாண்டீஸ்வரம் அருகே இரண்டு மாநகரப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

எதிர் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதியதில் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி துடித்தனர். இதில் பஸ் டிரைவர் மற்றும் 7 பயணிகள் காயமடைந்தனர். விபத்து குறித்து அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்த பஸ் டிரைவர் மற்றும் பயணிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதால் அங்கு சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்திய போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை வேளச்சேரியில் இரு மாநகர பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications