முடிவுக்கு வரும் 17 ஆண்டுகால காத்திருப்பு! இன்று வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் ரூட்டில் சோதனை
சென்னை: வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிறப்பு ரயில் மூலம் இன்று மதியம் 2 மணி முதல் 5:30 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. முதன்மை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் நடக்கும் இந்த சோதனை ஓட்டத்தின் போது, ரயில் தண்டவாளங்களை யாரும் நெருங்கவோ அல்லது அதன் அருகில் வேலை செய்யவோ கூடாது என தெற்கு ரயில்வே அறிவுறுத்தி உள்ளது.
சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வரும் நிலையில் அதனை பரங்கிமலை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று 2008 ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. பரங்கிமலை புறநகர் ரயில் நிலையத்தோடு இணைக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ஆனால் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டம் காலதாமதம் ஆனது. நீதிமன்ற வழக்குகளால் பணிகள் முடங்கிய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விரைவுபடுத்தப்பட்டு, கட்டுமான மற்றும் தண்டவாள அமைப்பு உள்ளிட்ட அனைத்து முக்கிய பணிகளும் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்தத் திட்டம் தொடங்கி 17 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் ஒரு சில நாட்களில் இந்த வழித்தடத்தில் சேவையை தொடங்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் இன்று அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.
வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிறப்பு ரயில் மூலம் இன்று மதியம் 1.30 மணி முதல் 6 மணி வரை இந்த சோதனை ஓட்டம் முதன்மை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் நடக்கிறது. இந்த சோதனை ஓட்டத்தின் போது அனுமதி இல்லாத நபர்கள் யாரும் ரெயில் தண்டவாளங்களை நெருங்கவோ அதன் அருகில் வேலை செய்ய வேண்டாம் என தெற்கு ரெயில்வே அறிவுறுத்தி உள்ளது.
இன்று நடைபெறும் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததும், விரைவில் பயணிகள் சேவை தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய இணைப்பு அமலுக்கு வந்தால், தாம்பரம் - சென்னை கடற்கரை வழித்தடத்திற்கு மாற்றுப் பாதை உருவாகும். நகரின் பல பகுதிகளில் இருந்தும் பயணிகள் நேரடியாக பரங்கிமலை வழியாக மற்ற புறநகர் பாதைகளுடன் இணைவதற்கு இது உதவும். போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பயண நேரமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு மீண்டும் வருகை தரும் போது இந்த சேவையை தொடங்கி வைக்கும் வாய்ப்பு இருப்பதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருச்சியில் நடைபெற உள்ள பொதுக்கூட்ட பயணத்துடன் இணைத்து தமிழ்நாட்டில் ரயில்வே தொடர்பான சில திட்டங்களை தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை












Click it and Unblock the Notifications