தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி.. ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் இன்று மூடல்!
Recommended Video
சென்னை: சென்னை ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வணிக வளாகம் மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடிநீர் லாரிகள் ஸ்டிரைக்கால் சென்னையின் பல பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பராமரிப்பு பணி காரணமாக இன்று, வணிக வளாகம் மூடப்படுவதாக போர்டு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டபோது, தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் எக்ஸ்பிரஸ் அவென்யூ நிர்வாகிகளிடம் கேட்டபோது, இது மாதா மாதம் நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்கான மூடல்தான். நாளை திறக்கப்படும் என்று தெரிவிக்கிறார்கள்.
[தமிழக கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற ஸ்ட்ரைக்.. சென்னை மக்கள் அவஸ்தை]
வாடிக்கையாளர்கள் வந்து ஏமாறக்கூடாது என்பதால், மாலிலுள்ள தியேட்டர்கள் வழக்கம்போல இன்று இயங்குகின்றன. உணவு கூடங்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
லாரி ஸ்ட்ரைக் தொடர்ந்தால், சென்னையில் பெரும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.