தமிழக கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற ஸ்ட்ரைக்.. சென்னை மக்கள் அவஸ்தை
Recommended Video

சென்னை: கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
கிரேட்டர் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர், அனந்த நாராயணன் இதுகுறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது: அடைக்கப்பட்ட குடிநீர் (கேன் வாட்டர்) உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளோம்.

அரசாணை 142 - ன் படி அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் குடிநீருக்காக நிலத்தடி நீரை உபயோகப்படுத்துவதில் பல்வேறு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் 60% அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போகிறோம்.
[கோலாகல விற்பனையில் கிருஷ்ணகிரி பொரி... செம பூரிப்பில் விற்பனையாளர்கள்!!]
அரசாணை 142-ஐ மாற்றம் செய்தோ அல்லது புதிய அரசாணை வெளியிட்டோ குடிநீர் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் இதற்கு தீர்வு ஏற்படும்வரை தங்களது வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.
வட சென்னை பகுதியை தவிர பெரும்பாலான சென்னை வாழ் மக்கள், கேன் வாட்டரை மட்டுமே குடிநீர் தேவைக்காக நம்பியுள்ளனர். இந்த நிலையில், வேலை நிறுத்த போராட்டம் என்பது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications