வாவ் குட் நியூஸ்.. சென்னை உள்பட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்
சென்னை: சென்னை உள்பட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாத இறுதியில் தொடங்கியது. இந்த நிலையில் தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்துவருகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில், தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.
அது போல் டெல்டா மாவட்டங்களுக்கும் கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு பெய்யலாம்.
தமிழகம், புதுவையையொட்டிய கடற்கரையில் மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவோ என்னவோ காலை முதல் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
ஃபேன் போட்டாலே கடுங்குளிர் நிலவுவதால் பலர் ஃபேன்களை ஆப் மோடில் வைத்து விட்டு கதகதப்பாக இருக்க வழி தேடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications