வெளுத்து வாங்கும் வெயில்.. "தானாக தந்தூரி ஆகும்" கோழிகள்.. சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுமா?
சென்னை: கோடை வெயில் கொளுத்தி வரும் இந்த ஆண்டு மக்கள் சென்னையில் மக்களுக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படுமா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் அதிகபட்சமாக 25 செமீ. மழை பதிவானது. ஏரிகள் நிரம்பி திடீரென திறக்கப்பட்டதால் சென்னையே வெள்ளத்தில் தத்தளித்தது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் தத்தளித்தனர். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை பெருமளவு பெய்தாலும் அது போன்ற பெரிய பாதிப்பு இல்லை.

கடும் தண்ணீர் தட்டுப்பாடு
இதனால் மக்கள் கடந்த 2019ஆம் ஆண்டு கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் தத்தளித்தனர். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் காலி குடங்களுடன் மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்தினர். ஹோட்டல்கள், உணவகங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. இதனால் ஹோட்டல்கள், உணவகங்களை நம்பி இருந்த மக்கள் அவதியடைந்தனர்.

லாரி மூலம் தண்ணீர்
சென்னையில் பெரும்பாலான மக்கள் லாரிகள் மூலம் தண்ணீரை வாங்கினர். பலர் வீடுகளை பூட்டிவிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற நிலை ஏற்பட்டது. 2020 ஆம் ஆண்டும் மழை பெய்த போதிலும் ஆங்காங்கே தண்ணீர் பஞ்சம் இருந்தது. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பக்கம் வீசியது.

நீர் நிலைகள்
இதனால் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பின. 5 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் கனமழை பெய்ததால் மக்கள் 2015 வெள்ளத்தை நினைத்து அஞ்சினர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. ஆனால் 2015 அளவுக்கு இல்லை என்றே சொல்லலாம். நவம்பர் மாதம் முதல் இரு நாட்களில் பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீராதாரங்கள் நிரம்பின.

வெயில் வாட்டி வதைக்கிறது
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதலே வெயில் வாட்டி வதைக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெயில் சதமடிக்கிறது. இன்னும் அக்னி நட்சத்திரம் எல்லாம் இருக்கிறது. அதற்குள் இப்படியொரு வெயிலால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுமா என்ற கேள்வி எழுந்தது.

தண்ணீர் பஞ்சம்
இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறுகையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 75 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. இதனால் நடப்பு ஆண்டில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
வங்கக்கடலில் நடந்த மாற்றம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை.. ரெடியா இருங்க மக்களே! வானிலை மையம் ஜில் அப்டேட் -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத்












Click it and Unblock the Notifications