மது போதையில் மேற்கூறையில் இருந்து டைவ்... மண்டையை உடைத்த நபர்
சென்னை : சென்னை அம்பத்தூர் அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர் மது போதையில் தனியார் நிறுவனத்தின் மேற்கூரையின் மீது ஏறி தலை கீழாக டைவ் அடித்ததில் மண்டை உடைந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அம்பத்தூர் அடுத்த பட்டரைவாக்கம் சர்வீஸ் சாலையில் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. அங்கு மது போதையில் சுற்றி திரிந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், நிறுவனத்திற்குள் புகுந்து, 25 உயரம் கொண்ட மேற்கூறையில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

இதனால் பதறிப்போன அங்கிருந்த சிலர் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பெயரில் உடனடியாக விரைந்து வந்த அம்பத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள், தற்கொலை மிரட்டல் விடுத்த நபரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதை அலட்சியப்படுத்திய அந்த நபர் மேற்கூறையின் இருபுறமும் மாறி மாறி சென்று தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
இந்த நிலையில் தீயணைப்பு துறையினர் அந்த நபரை கீழே இறங்கி வருமாறு கூறிகொண்டிருந்த நிலையில் அந்த நபர் திடீரென மேற்கூரையிலிருந்து துணியால் கண்ணை மூடிக்கொண்டு கவுண்டமணி காமெடி பாணியில், தலை கீழாக டைவ் அடித்தார். இதில் அங்கிருந்த மற்றொரு அடுக்கு சீட் மீது விழுந்தார்.
இதில் தலையில் அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட உயிருக்கு போராடியவரை, உடனடியாக மீட்டு அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினரிடம், தீயணைப்பு காவல்துறையினர் ஒப்படைத்தனர். உடனடியாக காவல்துறையினர் 108 அவசர ஊர்தி மூலம், மதுபோதையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த நபரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு - விசாரணை
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, மதுபோதையில் தற்கொலைக்கு முயன்ற அந்த ஆசாமி யார்? எங்கிருந்து வந்தார்? வெளிமாநிலத்தவரைச் சேர்ந்தவரா? என்ற கோணத்தில் தீவிரமாக என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபோதையில் தனியார் நிறுவனத்தின் மேற்கூறையின் மீது ஏறி, தற்கொலைக்கு முயன்று, தலையில் பலத்த காயமடைந்து உயிருக்குப் பேராடிய அந்த நபரால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications