போக்சோ வழக்கு.. உடனடியாக மேல்முறையீடு செய்யணும்.. டிஜிபிக்கு பறந்த பரபர கடிதம்!
சென்னை: போக்சோ வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலையை எதிர்த்து உடனடியாக மேல் முறையீடு செய்ய தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு, தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் அனுப்பியுள்ளார்.
போக்சோ உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளின் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையை எதிர்த்து உடனடியாக மேல் முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கும்படி விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என தமிழக டிஜிபி-க்கு, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் அனுப்பியுள்ளார்.

போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்ததை எதிர்த்து மேல் முறையீடு செய்யாதது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில், போக்சோ உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையை எதிர்த்து உடனடியாக மேல் முறையீடு செய்வது தொடர்பாக, தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்திற்கான போக்சோ வழக்குகளில், விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என சட்ட ஆலோசனை பெற்று, தாமதமின்றி மேல் முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக, விசாரணை அதிகாரிகளுக்கும், சிறப்பு அரசு வழக்கறிஞர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications