நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.. தலைமை ஹாஜி அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் சனிக்கிழமை அன்று ரமலான் கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இன்று பிறை தெரியாததால் நாளை மறுதினம் (மார்ச் 21) ரமலான் கொண்டாடப்படும் என அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு, கடந்த மாதம் தொடங்கியது. அதன்பின் கடந்த ஒரு மாதமாக இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில், இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படையில், ஷவ்வால் மாதம் தொடங்குவதைத் தொடர்ந்து, ரமலான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் வரும் சனிக்கிழமை ரம்ஜான் எனும் பெருநாள் நோன்பு கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி முப்தி உஸ்மான் பாகவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இன்று பிறை தென்படாததால் ரமலான் பண்டிகை மார்ச் 21-இல் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரேபிய நாடுகளில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியப் பெருமக்கள் சிறப்பு தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்று பிறை தென்படாததால் நாளை தமிழ்நாட்டில் ரம்ஜான் கொண்டாட்டம் இல்லை.
இந்தியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே ஈத் பிறையைக் காண்பதில் உள்ள வேறுபாட்டிற்கான முக்கிய காரணம் புவியியல் அமைப்பு. சவுதி அரேபியா இந்தியாவிற்கு மேற்கே அமைந்துள்ளது. இதன் காரணமாக பிறையின் நிலையைப் பொறுத்து அங்கு சூரியன் தாமதமாக மறைகிறது. சூரியன் மறையும் நேரத்தில், இந்தியாவை விட சவுதி வானத்தில் பிறை சற்று உயரமாகவும் பிரகாசமாகவும் தெரிகிறது. எனவே, அங்கு முந்தைய நாளே ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications