நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.. தலைமை ஹாஜி அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் சனிக்கிழமை அன்று ரமலான் கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இன்று பிறை தெரியாததால் நாளை மறுதினம் (மார்ச் 21) ரமலான் கொண்டாடப்படும் என அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு, கடந்த மாதம் தொடங்கியது. அதன்பின் கடந்த ஒரு மாதமாக இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில், இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படையில், ஷவ்வால் மாதம் தொடங்குவதைத் தொடர்ந்து, ரமலான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் வரும் சனிக்கிழமை ரம்ஜான் எனும் பெருநாள் நோன்பு கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி முப்தி உஸ்மான் பாகவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இன்று பிறை தென்படாததால் ரமலான் பண்டிகை மார்ச் 21-இல் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரேபிய நாடுகளில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியப் பெருமக்கள் சிறப்பு தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்று பிறை தென்படாததால் நாளை தமிழ்நாட்டில் ரம்ஜான் கொண்டாட்டம் இல்லை.
இந்தியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே ஈத் பிறையைக் காண்பதில் உள்ள வேறுபாட்டிற்கான முக்கிய காரணம் புவியியல் அமைப்பு. சவுதி அரேபியா இந்தியாவிற்கு மேற்கே அமைந்துள்ளது. இதன் காரணமாக பிறையின் நிலையைப் பொறுத்து அங்கு சூரியன் தாமதமாக மறைகிறது. சூரியன் மறையும் நேரத்தில், இந்தியாவை விட சவுதி வானத்தில் பிறை சற்று உயரமாகவும் பிரகாசமாகவும் தெரிகிறது. எனவே, அங்கு முந்தைய நாளே ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.












Click it and Unblock the Notifications