Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெட்ராஸ் பார் அசோஷியேஷன் சார்பில்.. சென்னை உயர் நீதிமன்றத்தில் இருதய மருத்துவ முகாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக இருதய தினத்தை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மருத்துவ முகாமை பொறுப்பு தலைமை நீதிபதி இன்று தொடங்கி வைத்தார்.

உலக இருதய தினம் வரும் செப்டம்பர் 29 ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மெட்ராஸ் பார் அசோஷியேஷன் மற்றும் பில்ரோத் மருத்துவமனை நிர்வாகம் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இருதய மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

madras high court

இந்த முகாமை சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் துவங்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமை பில்ரோத் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜெகநாதன்அவர்கள் தலைமையில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் மெட்ராஸ் பார் அசோசியசன் தலைவர் பாஸ்கர், செயலாளர் திருவேங்கடம் மற்றும் ரவுண்ட் டேபிள் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

இந்த மருத்துவ முகாமில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பலரும் கலந்து கொண்டு பயனடைந்தனர். நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் மன அழுத்தம், இதய பாதிப்புகள் தடுக்கவும், அதை ஆரம்ப நிலையிலேயே கண்டறியவும் இந்த முகாம் உதவும் எனவும் இந்த மருத்துவ முகாம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 நாட்கள் முகாம் நடத்தப்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

madras high court

இருதய நோய் கண்டறியும் இந்த மருத்துவ முகாமில் சிறப்பு அம்சமாக ஒரு குடும்பத்தில் இருவர் பயனடையும் வகையில் பரிசோதனைக்கான அட்டை வழங்கப்பட்டது. இந்த அட்டையை பயன்படுத்தி இருதய நோய் தொடர்பாக சிகிச்சை பெற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+