மதுரை, திருச்சி டைடல் பார்க்.. பிப்.13ல் அடிக்கல் நாட்டும் முதல்வர்.. 18 மாதங்களில் முடியும் பணிகள்!
சென்னை: மதுரை, திருச்சி டைடல் பூங்கா கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா பிப்.13ஆம் தேதி நடக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது. சென்னையில் இருந்தவாறு காணொளி வாயிலாக மதுரை, திருச்சி டைடல் பூங்கா பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளதாகவும், இந்த பணிகள் 18 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகமும் தமிழ்நாடு மின்னணு கழகமும் இணைந்து தமிழ்நாடு டைடல் பார்க் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனத்தை செயல்படுத்தி வருகின்றன. ஐடி வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் டைடல் பூங்காக்களை அரசு அமைத்து வருகிறது. அந்த வகையில் சென்னை, கோவை நகரங்களுக்கு அடுத்தபடியாக மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

வேலூர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்ட சூழலில், மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பார்க் அமைக்கும் பணிகள் தொடங்கப்படாமலேயே இருந்தது. கிட்டத்தட்ட டைடல் பார்க் திட்டம் அறிவிக்கப்பட்டு, 2 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் இளைஞர்கள் பலரும் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக மதுரை மற்றும் திருச்சி டைடல் பூங்கா பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டது. மதுரையை பொறுத்தவரை மாட்டுத்தாவணி அருகே 9.97 ஏக்கர் நிலத்தில் டைடல் பார்க் அமையவுள்ளது. ரூ.500 கோடியில் தரை தளம் மற்றும் 6 தளங்களுடன் அமைக்கப்படவுள்ளது. இரு கட்டங்களாக அமையவுள்ளது.
இதன் மூலமாக சுமார் 6 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் திருச்சியை பொறுத்தவரை திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில் 14.16 ஏக்கரில் ரூ.315 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலமாக சுமார் 5 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெண்டர் பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், சுற்றுச்சூழல் அனுமதியும் பெறப்பட்டது. இதனால் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் பிப்.13ஆம் தேதி மதுரை மற்றும் திருச்சி டைடல் பார்க் கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளார்.
சென்னையில் இருந்தவாறு காணொளி வாயிலாக டைடல் பார்க் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கட்டுமான பணிகளை 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டிய பின் உடனடியாக கட்டுமான பணிகளை தொடங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications