ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம்.. நாள் குறித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. திமுக முக்கிய அறிவிப்பு!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முதல்வர் பிரச்சாரம் செய்யும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிப்.24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சார களம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிப்.27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுக சார்பாக தென்னரசு, தேமுதிக சார்பாக ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா உள்ளிட்டோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 80 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. முக்கிய கட்சிகள் உட்பட சுயேட்சைகளும் களத்தில் இருப்பதால், இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதேபோல் அதிமுக தரப்பில் இடைத்தேர்தலில் வெற்றிபெற தீவிரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடுத்தடுத்து வரும் திமுக தலைவர்கள்
அதேபோல் திமுக தரப்பில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் 11 அமைச்சர்கள் களமிறக்கப்பட்டு வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் வரும் நாட்களில் திமுகவின் முக்கியத் தலைவர்களான ஆ.ராசா, கனிமொழி, டிஆர் பாலு உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சிகள்
அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரு நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் விசிக தலைவர் திருமாவளவன், சிபிஎம் பாலகிருஷ்ணன், சிபிஐ முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசன் உள்ளிட்டோரும் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது.

முக ஸ்டாலின் பிரச்சாரம்
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொள்ள வருவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 24ம் தேதி வெட்டிக்காடு வலசு, நாச்சாயி டீ கடை, சம்பத் நகர் உள்ளிட்ட இடங்களில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும், பிப்.25ம் தேதி ஜெகநாதபுரம் காலனி, சூரம்பட்டி நால்ரோடு, மணிக்கூண்டு உள்ளிட்ட இடங்களில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications