அரசுப் பள்ளியில் பயில்பவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல! நிகர் சாஜியே அதற்கு உதாரணம்! -ஸ்டாலின்
சென்னை: ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகர் சாஜிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சாதனை தமிழர்கள் வரிசையில் நிகர் சாஜியும் இடம்பிடித்ததால் நான் பெருமை கொள்கிறேன் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அரசுப் பள்ளியில் பயில்பவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பது நிகர் சாஜி மூலம் நிரூபணம் ஆகியுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து நிகர் சாஜிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து பதிவு வருமாறு;

''தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி நிகர் ஷாஜி அவர்களை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன்.
தமிழ்நாட்டின் மாநில அரசுப் பள்ளி, கல்லூரி, பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் திறத்திலும் தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதைத் தொடர்ந்து சந்திரயான் முதல் ஆதித்யா வரை நம் சாதனைத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர்.
இஸ்ரோவின் பெருமைமிகு திட்டத்துக்கு நிகர் சாஜி அவர்கள் தலைமைப் பொறுப்பேற்றிருப்பதைப் பார்த்து அவர்கள் குடும்பத்தினர் எத்தகைய பூரிப்பை, பெருமையை அடைந்திருக்கிறார்களோ அதே அளவுக்கு நானும் பெருமிதம் கொள்கிறேன்!''












Click it and Unblock the Notifications