காலையிலேயே காரை எடுத்துக் கொண்டு புறப்பட்ட ஸ்டாலின்! ஒரு இடம் விடாமல் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு
சென்னை: மாண்டஸ் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்வதற்காக காலையிலேயே காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
இரவு முழுவதும் அமைச்சர்கள், அதிகாரிகளிடம் நிலவரத்தை தொலைபேசியில் கேட்டறிந்த அவர் விடிந்தும் விடியாமலும் சென்னையை ஒரு ரவுன்டு அடிக்க புறப்பட்டு விட்டார்.
புயல் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்வதுடன் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

2 நாள் பயணம்
தென்காசி, ராஜபாளையம், மதுரை என 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று மாலை சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின், விமான நிலையத்தில் இருந்து நேராக எழிலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு அறைக்கு சென்று மழை புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து வீட்டுக்கு புறப்பட்டுச் சென்ற அவர், இரவு முழுவதும் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் என மாற்றி மாற்றி தொலைபேசி மூலம் பேசி நிலவரத்தை கேட்டறிந்து வந்தார்.

நேரில் ஆய்வு
இந்நிலையில் இன்று காலை விடிந்தும் விடியாமலும் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் மழை புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்து வருகிறார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், கே.என்.நேரு ஆகியோர் உடன் பயணித்து வருகின்றனர்.கார் செல்ல முடியாத தெருவிற்குள் நடந்தே சென்று புயல் பாதிப்பை பார்வையிட்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

பொருட்கள் வழங்கி உதவி
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை, அரிசி, பிரட், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினார். முதலமைச்சர் ஸ்டாலின் நினைத்திருந்தால் சென்னை மாநகராட்சி மேயரையும், மூத்த அமைச்சர்களையும் ஆய்வுக்கு அனுப்பிவிட்டு அவர்களிடம் நிலவரத்தை கேட்டறிந்து இருக்கலாம். ஆனால் அப்படி செய்ய விரும்பாத முதல்வர் ஸ்டாலின், தாமே நேரடியாக களமிறங்கி கவனம் ஈர்த்திருக்கிறார்.

இயல்பு நிலை
ஓரிரு நாட்களுக்குள் புயல் பாதிப்புகளை சரி செய்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை முதல்வர் முன்னெடுத்துள்ளார். மழையோ, புயலோ, வெள்ளமோ எதுவாகினும் முதல்வர் ஸ்டாலின் முதல் ஆளாக களமிறங்கி வருவது கவனிக்கத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications