பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்.. மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் - கொந்தளிக்கும் அண்ணாமலை
மதுரை: ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலம் திறப்பு விழாவுக்காக தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் அவமானப்படுத்தி விட்டதாகவும், இதற்காக தமிழக மக்களிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது :- கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக பிரமரின் நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் தவிர்த்துள்ளார். இலங்கை சென்றிருந்த பிரதமர் மோடி டெல்லிக்கு கூட செல்லாமல் நமக்காக ரூ.8,300 கோடி மதிப்பிலான திட்டங்களைக் கொடுப்பதற்காக தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார்.

அப்படி இருக்கும்போது பிரதமரை வரவேற்பது என்பது தமிழக முதல்வரின் தலையாயக் கடமை. ஆனால், இந்த விஷயத்தில் முதல்வர் அரசியல் செய்துள்ளார். ராமேஸ்வரத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் ஊட்டிக்கு சென்று விட்டார்.
தொகுதி மறுசீரமைப்பை காரணம் காட்டி ஊட்டியில் இருக்க வேண்டிய அவசியம் என்ன. தனது கடமையை முதல்வர் செய்ய தவறிவிட்டார். இதனை பாஜக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழக மக்களுக்காக பணியாற்ற வந்த பிரதமரை முதல்வர் அவமானப்படுத்தி உள்ளார். அதற்காக, தமிழக மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.
பிரதமர், தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேச வேண்டும் என்று முதல்வர் கூறியிருக்கிறார். முதல்வரின் தொகுதி மறுசீரமைப்பு நாடகத்தை தமிழக மக்கள் உணர்ந்து விட்டனர். இதை ஒரு காரணமாக வைத்து, ஊட்டியில் முதல்வர் ஒளிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
தமிழகத்தின் மீது அக்கறை இருந்திருந்தால் இன்று முதல்வர் வருகை தந்திருக்க வேண்டும். ஆனால், வரவில்லை. ராமேஸ்வரம் நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சி.
அதனால்தான் மேடைக்குப் பின்னால் இருந்தேன். கோவிலில் இருந்தேன். அரசு நிகழ்ச்சி இல்லாமல் எங்கெல்லாம் இருந்தாரோ அங்கெல்லாம் நான் இருந்தேன். மக்களின் வரிப்பணத்தில் நடக்கக்கூடிய அரசு நிகழ்ச்சியில் எனக்கு வேலையில்லை.
அதனால்தான் பாஜகவின் பிரதிநிதிகளான மத்திய இணை அமைச்சர் எல் முருகன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் இருந்தனர். அதில் நான் இருப்பது தவறு. பாஜக தலைவர் போட்டியில் நானில்லை. மற்ற கட்சிகள் எப்படி கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறும் அளவுக்கு நமது முதல்வர் வேலை இல்லாமல் இருக்கிறார்.
எங்கிருந்தாலும் நான் எனது பணியை செய்யப் போகிறேன். பதவி வந்தாலும் மாற மாட்டேன்; வராவிட்டாலும் மாற மாட்டேன் என்றார்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்?












Click it and Unblock the Notifications