வெள்ளை அறிக்கை.. வெளிப்படையான ஆட்சி.. அதிரடி காட்டிய விஜய்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. இதில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. விஜய் இன்று முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். கோட், சூட்டுடன் மேடையேறிய விஜய் ஆண்டவன் மீது ஆணையாக என்று சொல்லி பதவியேற்றுள்ளார். பதவியேற்ற பிறகு பேசிய விஜய், தமிழக அரசின் சுமக்கவே முடியாத கடனில் தவிக்கிறது. தமிழ்நாடு அரசின் நிலைமையை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு, வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.
முதலமைச்சராக பதவியேற்ற பிறகு பேசிய விஜய், மன்னர் பரம்பரையில் இருந்து வரவில்லை. சாதாரண உதவி இயக்குநரின் மகன் நான். என்னை உங்கள் மகனாக, அண்ணனாக, தம்பியாக ஏற்று கொண்டீர்கள். இந்தப் பயணத்தில் எவ்வளேவா கஷ்டங்கள், அவமானங்கள் இருந்தன. அதை பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் என் கூடவே நின்று என்னை முதலமைச்சராக்கியுள்ளீர்கள். வறுமை, பசி எல்லாம் தெரிந்தவன் நான். நான் தேவ தூதன் அல்ல. சராசரி மனிதன் நான்.

நான் செய்ய முடியாத வாக்குறுதிகளை சொல்லவில்லை. சாத்தியமான எல்லாவற்றையும் செய்வோம். எது வந்தாலும், எவ்வளவு வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலையில் உள்ளேன். தமிழக அரசின் நிலை 10 லட்சம் கடன் கோடி கடனில் உள்ளது. இதற்கு முன்னதாக இருந்தவர்கள் கஜானாவை காலி செய்துள்ளனர். அங்கு எப்படி இருக்கிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
கஜானா மோசமான நிலையில் உள்ளது. எல்லாவற்றையும் ஆய்வு செய்து வெள்ளை அறிக்கையாக வெளியிடுவேன். உங்களிடம் வெளிப்படையான ஆட்சியை கொடுப்பேன். தமிழக அரசின் தற்போதைய நிலையை வெள்ளை அறிக்கையாக வெளியிடுவதில் இருந்து என் பணியை தொடங்குவேன். சொன்னவை அனைத்தையும் செய்வேன். எனக்கு அவகாசம் மட்டும் கொடுங்கள். இது உங்களின் ஆட்சி. சட்டம் ஒழுங்கு பெண்கள் பாதுகாப்பு, போதை தடுப்பு, கல்வி, போக்குவரத்து ஆகியவற்றில் கவனம் செலுத்துவேன்.
மக்களின் ஒரு பைசா கூட எடுக்க மாட்டேன். இந்த ஆட்சியில் யாரும் தவறு, ஊல் செய்ய முடியாது. ஜெயித்துவிட்டோம் என்று ஆடிவிடலாம் என யாராவது நினைத்தால் இப்போதே அதை அழித்துவிடலாம். இங்கு ஒரே ஒரு பவர் சென்டர் தான். அது இந்த விஜய் மட்டும் தான். இங்கு எந்த தவறும் நடக்காது. குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து இந்த விஜய் மாமா செயல்படுவேன். இது ஒரு புதிய தொடக்கம். அனைவரும் இணைந்து நல்லாட்சியை வழங்குவோம் வாருங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications