சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி புதிய ரயில் நேர அட்டவணை எப்படி இருக்கும்? சென்னைவாசிகளே நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4 கிலோ மீட்டர் தொலைவிலான 4-வது பாதைக்கான பணிகள் வரும் 27-ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதனால் கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை வரும் 27-ந்தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. மின்சார ரயில் சேவை இனி வேளச்சேரி-சிந்தாதிரிப்பேட்டை வழித்தடத்தில் எப்படி இருக்கும் .
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே ரூ.279 கோடி மதிப்பில் 4-வது புதிய பாதை அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக சென்னை கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை வரும் 27-ந்தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. அடுத்த 7 மாதங்களுக்கு கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட உள்ளது. இனி மீண்டும் கடற்கரை -வேளச்சேரி இடையே சேவையை தொடங்கும் வரை, வேளச்சேரி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை இடையே மட்டும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இதுபற்றி சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் பி.விஸ்வநாத் ஈர்யா சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பேசும் போது, இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி மேலும் பி.விஸ்வநாத் ஈர்யா கூறும் போது, வேளச்சேரி-சேப்பாக்கம் வரை மின்சார ரயில் சேவை இயக்க முதலில் நாங்கள் முடிவு செய்தோம். ஆனால் சேப்பாக்கத்தில் இருந்து போதிய அளவு பேருந்து வசதி இல்லை என்பதால், சிந்தாதிரிப்பேட்டை வரை மின்சார ரயில் சேவை வழங்க முடிவு செய்துள்ளோம்.
ஆனால் சிந்தாதிரிப்பேட்டை -சேப்பாக்கம் இடையே சிங்கள் டிராகிக்கில் தான் ரயில்களை இயக்க முடியும். சேப்பாக்கம் டூ வேளச்சேரி இருவழியிலும், சேப்பாக்கம் டூ சிந்தாரிப்பேட்டை சிங்கிளில் வழியில் மட்டுமே ரயிலை இயக்க முடியும் என்பதால் ரயில் சேவைகள் 25 நிமிடத்திற்கு ஒருமுறை தான் இயக்கப்படும்.
எனவே இதுவரை கடற்கரை-வேளச்சேரி இடையே 122 ரயில் சேவை இயக்கப்பட்டு வந்த நிலையில் இனிமேல் 27-ந்தேதி முதல் 80 மின்சார ரயில் சேவை மட்டுமே இயக்கப்படும். இதேபோல் கும்மிடிப்பூண்டி, ஆவடி, அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரிக்கு செல்ல வேண்டிய 59 மின்சார ரயில் சேவைகள் கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும்.
வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் வேளச்சேரியில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு முதல் ரயில் காலை 5 மணிக்கும் கடைசி ரயில் இரவு 10.15 மணிக்கும் இயக்கப்பட உள்ளது. இதேபோல் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு முதல் ரயில் காலை 5.40 மணிக்கும் கடைசி ரயில் இரவு 11.05 மணிக்கும் இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், மாலையில் 4.25 மணி முதல் 10.15 மணி வரையிலும் (பீக் அவர்ஸ் இல்) , ஒவ்வொரு 25 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில்களை இயக்க உள்ளோம். பீக் அவர்ஸ் இல்லாத மற்ற நேரங்களில் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும். சிந்தாதிரிப்பேட்டை வரை ரயில்களை இயக்க காரணம், அங்கு (சிம்சன் பஸ் ஸ்டாண்டில்) இருந்துதான் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. தேவைப்பட்டால் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து எழும்பூர் மற்றும் சென்ட்ரலுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு போக்குவரத்து கழகத்திடம் கோரிக்கை வைக்கப்படும்.
இந்த 4-வது பாதை அமைக்க 1992-ம் ஆண்டு முதல் நீண்ட காலமாக கோரிக்கை உள்ளது, ஆனால் நிலப்பிரச்சினை உள்ளிட்ட சில பிரச்சினைகளால் தாமதமாகியது.. தற்போது, அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதால் சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4 கிலோ மீட்டர் தொலைவிலான 4-வது பாதைக்கான பணிகளை வரும் ஆகஸ்ட் 27-ந்தேதி முதல் தொடங்குகிறோம். இந்த திட்டத்துக்கு ரூ.279 கோடி செலவிடப்பட உள்ளது. 7 மாதத்தில் பணிகள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். 4-வது பாதை அமைப்பதன் மூலம் தென்பகுதிக்கு கூடுதல் ரயில்கள் இயக்க முடியும்" இவ்வாறு என்றார்.
சிந்தாதிரிப்பேட்டை உடன் நிறுத்துவதற்கு பதிலாக பார்க் வரை இணைத்திருந்தால் சிறப்பாக இருக்கும் என்று பொதுமக்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர். சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து எழும்பூர் அல்லது சென்ட்ரலுக்கு பேருந்தில் செல்வதற்கு பதில், ரயிலில் செல்லவே மக்கள் விரும்புகிறார்கள். பார்க் (பூங்கா சந்திப்பு) ரயில்களை இயக்க நடவடிக்கை எடுத்தால் அதிக ரயில்களை இயக்க முடியும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications