வைரமுத்து உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும்- சின்மயி
Recommended Video
சென்னை: வைரமுத்து உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து இசை நிகழ்ச்சிக்காக சுவிட்சர்லாந்து சென்ற போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்தார். இதற்கு நாலைந்து நாட்கள் கழித்து வைரமுத்து மறுப்பு தெரிவித்து வீடியோ அனுப்பியுள்ளார்.
[என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை.. வழக்கு தொடுத்தால் சந்திக்க தயார்- வைரமுத்து விளக்கம் ]
அதில் அவர் கூறுகையில் என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க பொய்யானவை. அவை அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை. புகார் தெரிவித்தவர்கள் வழக்கு தொடுத்தால் சந்திக்கிறேன் என்று வீடியோவில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
Mr. Vairamuthu should take a lie detector test.
— Chinmayi Sripaada (@Chinmayi) October 14, 2018
Enough said.
இதுகுறித்து சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் வைரமுத்து உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.