சித்ரா தற்கொலை வழக்கு - சிபிசிஐடி விசாரணை கேட்கும் தாயார் - முதல்வர் தனிப்பிரிவில் மனு
மகளின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று முதல்வரின் தனிப்பிரிவில் சித்ராவின் தாயார் மனு கொடுத்துள்ளார்.
சென்னை: டிவி சீரியல் நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று அவரது தாயார் விஜயா முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார். ஆர்டிஓ விசாரணை முடிந்து அறிக்கை சமர்பிக்கப்பட்ட நிலையில் சிபிசிஐடி விசாரணை கேட்டு கோரிக்கை வைத்துள்ளார் விஜயா.
சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 9ஆம் தேதி பூந்தமல்லி அருகே பழஞ்சூர் தனியார் நட்சத்திர ஹோட்டலில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை கடந்த 14-ம் தேதி நள்ளிரவில் கைது செய்தனர்.

இதற்கிடையே பதிவு திருமணமாகி 2 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதால், இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ கடந்த 14ஆம் தேதி முதல் விசாரணையில் ஈடுபட்டு வந்தார்.
முதல் நாள் விசாரணையில் சித்ராவின் பெற்றோர், சகோதரி, சகோதரர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, ஹேம்நாத்தின் பெற்றோர் மற்றும் ஹேம்நாத்திடம் விசாரணை நடத்தினார். சித்ராவுடன் டிவி சீரியலில் நடித்த நடிகர்- நடிகைகள், சித்ரா மற்றும் ஹேம்நாத் ஆகியோரின் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் உள்பட 16 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆர்டிஓ திவ்யஸ்ரீ இன்று தனது விசாரணை அறிக்கையை பூவிருந்தவல்லி உதவி ஆணையர் சுதர்சனத்திடம் ஒப்படைத்துள்ளார்.
இதனிடையே மகளின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று சித்ராவின் தாயார் விஜயா, முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார். சித்ரா தற்கொலை தொடர்பாக ஆர்டிஓ விசாரணை முடிந்து அறிக்கை சமர்பிக்கப்பட்ட நிலையில் சிபிசிஐடி விசாரணை கேட்டு கோரிக்கை வைத்துள்ளார் விஜயா.
சித்ரா தற்கொலையில் வழக்கில் சந்தேகம் இருப்பதாக, ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆர்டிஒ விசாரணை நடைபெறும் நிலையில், தனது மகன் கைது செய்யப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறிய அவர், சித்ராவின் மரணம் குறித்து முறையாக விசாரிக்க வேண்டும் எனவும் ஆணையரிடம் கோரிக்கை வைத்ததாக கூறியிருந்தார். சித்ரா இறந்த ஓட்டலில் சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் ரவிச்சந்திரன் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications