Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பள்ளி மாணவர்கள் வாட்ஸ் அப் குழுவிற்கு ஆபாசப்படங்களை அனுப்பிய மாணவனின் சித்தப்பா கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நீலாங்கரையை சேர்ந்த பசுபதி என்பவர் மாணவர்களின்‌ வாட்ஸ்‌ஆப்‌ குழுவில்‌ ஆபாச படங்களை அனுப்பியதால்‌ காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை அடுத்த பாலவாக்கத்தில் பகுதியை சேர்ந்த அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதற்காக, தன்னுடைய பள்ளியில் படிக்கும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்காக வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இதில் ஒரு மாணவனது வாட்ஸ்அப் நம்பரிலிருந்து ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து அனுப்பப்படுவதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

செல்போன்

செல்போன்

பின்னர், புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் தன்னுடைய தாத்தா வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அப்பொழுது தன்னுடைய தாத்தாவின் செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்பை கவனித்து வந்துள்ளார்.

வாட்ஸ் அப் குழு

வாட்ஸ் அப் குழு

இதனை அறிந்த மாணவனின் சித்தப்பா பசுபதி என்பவர் செல்போனை எடுத்து வாட்ஸ்அப் குழுவில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பியது தெரியவந்தது.. இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நகை பறிப்பு

நகை பறிப்பு

சென்னை திருவொற்றியூரில் ஓடும் ரயிலில் ஏறி பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து
7 1/2 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை திருவொற்றியூர் கிராம தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி விஜயலட்சுமி(46). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ஓடும் ரயில் நடந்த சம்பவம்

ஓடும் ரயில் நடந்த சம்பவம்

கடந்த 15 ஆம் தேதியன்று விஜயலட்சுமி தனது 3 குழுந்தைகளுடன் திருவொற்றியூர் ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு மின்சார ரயிலில் பயணித்தார். திருவொற்றியூரில் இருந்து ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஓடும் ரயிலில் விஜயலட்சுமி இருந்த பெட்டியில் ஏறிய மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 7 1/2 சவரன் தங்க நகைகளை பறித்து கொண்டு ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடிவிட்டனர்.

கொள்ளையர்கள்

கொள்ளையர்கள்

உடனடியாக விஜயலட்சுமி சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் ரயில்வே கண்காணிப்பாளர் இளங்கோ உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பாளர் முத்துகுமார் மேற்பார்வையில் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் பரந்தாமன், காவலர்கள் வீரபாகு, சேக் உஸ்மான், சிவா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அடிக்கடி செல்போன் பறிப்பு

அடிக்கடி செல்போன் பறிப்பு

இந்நிலையில் சம்பவம் நடந்த திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே தனிப்படை போலீசார் ஆய்வு மேற்கொண்டபோது வழிப்பறி கொள்ளையர்கள் விட்டு சென்ற செருப்பு கிடைத்தது. மேலும் பழைய குற்றவாளிகளின் படங்களை விஜயலட்சுமியிடம் காண்பித்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். மேலும் சம்பவம் நடந்த அன்று ரயில் நிலையத்திற்கு அருகே வந்து சென்றது இதே பகுதியில் அடிக்கடி செல்போன் பறிப்பில் ஈடுபடும் தினேஷ் என்கிற கிளி(19) என தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையின்போது ரகசிய தகவலாக கிடைத்தது.

கைதான குற்றவாளி

கைதான குற்றவாளி

உடனடியாக திருவொற்றியூர் பகுதிக்கு விரைந்த தனிப்படை போலீசார் அங்கு கஞ்சா போதையில் இருந்த தினேஷை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விஜயலட்சுமியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதை அவர் ஒப்பு கொண்டார். உடனடியாக அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 7 1/ 2 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் நகை பறிப்பு தொடர்பாக தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+