Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சோழப் பேரரசி செம்பியன் மகாதேவி.. 1000 ஆண்டுகள் பழங்கால சிலை.. அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சோழ பேரரசியான செம்பியன் மகாதேவியின் உலோக சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் நாவலை வாசித்தவர்களுக்கு செம்பியன் மகாதேவி யார் என்பது தெரிந்திருக்கும். ராஜராஜ சோழனின் பாட்டியும், சுந்தர சோழனின் தாயும், கந்தராதித்ய சோழரின் மனைவியுமான செம்பியன் மகாதேவி, சிவ வழிபாட்டில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

 யார் இந்த செம்பியன் மகாதேவி?

யார் இந்த செம்பியன் மகாதேவி?

கணவரின் மறைவுக்கு பின், சோழப் பேரரசில் முக்கியப் பொறுப்பு வகித்து வந்த செம்பியன் மகாதேவி, கோயில்களை கட்டட முறைகளில் முக்கிய மாற்றங்களை செய்து காட்டியவர். அதுநாள் வரை செங்கல் கற்களை கொண்டு கட்டப்பட்டு வந்த கோயில்களை, இவரின் வழிகாட்டுதல் பேரில் கருங்கற்களை கொண்டு கட்டப்பட்டது.

செம்பியன் மகாதேவி சிலை

செம்பியன் மகாதேவி சிலை

இப்படி கோயில் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட செம்பியன் மகாதேவியின் மறைவுக்கு பின், நாகை மாவட்டத்தில் உள்ள செம்பியன் மகாதேவி கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் செம்பியன் மகாதேவிக்கு உலோகத்தால் சிலை அமைக்கப்பட்டது.

 சிலை திருட்டு

சிலை திருட்டு

செம்பியன் மகாதேவி சிலை சோழ வம்சத்தை சேர்ந்த 1000 வருடத்திற்கும் பழமையான உலோக சிலையாகும். இது கடந்த 1958ம் ஆண்டு திருடப்பட்டதாக யானை ராஜேந்திரன் என்பவர் புகாரளித்தார். இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர்.

அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

இந்த நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஃபிரீர் கேலரி ஆஃப் ஆர்ட் அருங்காட்சியகத்தில் மூன்றரை அடி உயரம் கொண்ட செம்பியன் மகாதேவி சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாகை மாவட்டத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள செம்பியன் மகாதேவி சிலை போலியானது என்பதும், உண்மையான சிலை கடந்த 1929ம் ஆண்டு இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

போலீசார் நடவடிக்கை

போலீசார் நடவடிக்கை

அதுமட்டுமல்லாமல் தற்போது கைலாசநாதர் கோவிலில் உள்ள சிலை, 1958ம் ஆண்டு அறநிலையத்துறை அதிகாரிகளால் வைக்கப்பட்ட சிலை என்பது தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள செம்பியன் மகாதேவி சிலையை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+