இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினம் இன்று.. சர்ச்சுகளில் புனித வெள்ளி அனுசரிப்பு
சென்னை: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதன் நினைவாக இன்று கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி தினத்தை அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி தமிழகத்தில் உள்ள சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஈஸ்டர். இந்த இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்த பிறகு 3வது நாளில் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.

அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்பாக கிறஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிக்கின்றனர்.
அதன்படி கடந்த மாதம் 5ம் தேதி கிறிஸ்தவர்கள் தவக்காலம் தொடங்கியது. சாம்பல் புதன் நிகழ்வுடன் தவக்காலம் தொடங்கியது. அதன்பிறகு தினமும் சர்ச்சுகளில் பிரார்த்தனை, ஆராதனை நடந்து வந்தது. இந்த தவக்காலத்தின் முக்கிய நாளாக புனித வியாழன், புனித வெள்ளி ஆகியவை உள்ளது.
அதன்படி நேற்று புனித வியாழன் கடைப்பிடிக்கப்பட்டது. இன்று புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவு கூரும் வகையில் இன்று புனித வெள்ளி தினத்தை கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். கிறிஸ்தவர்களை பொறுத்தவரை புனித வெள்ளி என்பது துக்க தினமாகும்.
மக்களுக்காக உயிர் நீத்த இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் புனித வெள்ளி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பல சர்ச்சுகளில் இயேசு கிறிஸ்து மரணத்தை நினைவுப்படுத்தும் சிலுவைப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்களில் இன்று புனித வெள்ளி பிரார்த்தனைகள் நடந்தது.
அதேபோல் பல மாவட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியை கடைப்பிடித்து வருகின்றனர். குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது.
சிலுவையில் இயேசு அறையப்பட்டு உயிர் துறக்கும் முன்பு அவர் பேசிய 7 வார்த்தைகளை மையப்படுத்தி பிரார்த்தனை நடக்கும். சிஎஸ்ஐ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது. கத்தோலிக்க சர்ச்சுகளில் இன்று மாலையில் சிலுவைப்பாதை பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புனித வெள்ளி தினத்தையொட்டி இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இன்று புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படும் நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினம் கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்தவர்களை பொறுத்தவரை இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3வது நாளில் உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கை உள்ளது. அதாவது இயேசு கிறிஸ்து மரணத்தை வென்றார் என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். அந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் நாளாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட உள்ளனர்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications