இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினம் இன்று.. சர்ச்சுகளில் புனித வெள்ளி அனுசரிப்பு
சென்னை: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதன் நினைவாக இன்று கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி தினத்தை அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி தமிழகத்தில் உள்ள சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஈஸ்டர். இந்த இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்த பிறகு 3வது நாளில் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.

அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்பாக கிறஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிக்கின்றனர்.
அதன்படி கடந்த மாதம் 5ம் தேதி கிறிஸ்தவர்கள் தவக்காலம் தொடங்கியது. சாம்பல் புதன் நிகழ்வுடன் தவக்காலம் தொடங்கியது. அதன்பிறகு தினமும் சர்ச்சுகளில் பிரார்த்தனை, ஆராதனை நடந்து வந்தது. இந்த தவக்காலத்தின் முக்கிய நாளாக புனித வியாழன், புனித வெள்ளி ஆகியவை உள்ளது.
அதன்படி நேற்று புனித வியாழன் கடைப்பிடிக்கப்பட்டது. இன்று புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவு கூரும் வகையில் இன்று புனித வெள்ளி தினத்தை கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். கிறிஸ்தவர்களை பொறுத்தவரை புனித வெள்ளி என்பது துக்க தினமாகும்.
மக்களுக்காக உயிர் நீத்த இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் புனித வெள்ளி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பல சர்ச்சுகளில் இயேசு கிறிஸ்து மரணத்தை நினைவுப்படுத்தும் சிலுவைப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்களில் இன்று புனித வெள்ளி பிரார்த்தனைகள் நடந்தது.
அதேபோல் பல மாவட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியை கடைப்பிடித்து வருகின்றனர். குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது.
சிலுவையில் இயேசு அறையப்பட்டு உயிர் துறக்கும் முன்பு அவர் பேசிய 7 வார்த்தைகளை மையப்படுத்தி பிரார்த்தனை நடக்கும். சிஎஸ்ஐ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது. கத்தோலிக்க சர்ச்சுகளில் இன்று மாலையில் சிலுவைப்பாதை பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புனித வெள்ளி தினத்தையொட்டி இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இன்று புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படும் நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினம் கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்தவர்களை பொறுத்தவரை இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3வது நாளில் உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கை உள்ளது. அதாவது இயேசு கிறிஸ்து மரணத்தை வென்றார் என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். அந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் நாளாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட உள்ளனர்.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications