இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினம் இன்று.. சர்ச்சுகளில் புனித வெள்ளி அனுசரிப்பு
சென்னை: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதன் நினைவாக இன்று கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி தினத்தை அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி தமிழகத்தில் உள்ள சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஈஸ்டர். இந்த இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்த பிறகு 3வது நாளில் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.

அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்பாக கிறஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிக்கின்றனர்.
அதன்படி கடந்த மாதம் 5ம் தேதி கிறிஸ்தவர்கள் தவக்காலம் தொடங்கியது. சாம்பல் புதன் நிகழ்வுடன் தவக்காலம் தொடங்கியது. அதன்பிறகு தினமும் சர்ச்சுகளில் பிரார்த்தனை, ஆராதனை நடந்து வந்தது. இந்த தவக்காலத்தின் முக்கிய நாளாக புனித வியாழன், புனித வெள்ளி ஆகியவை உள்ளது.
அதன்படி நேற்று புனித வியாழன் கடைப்பிடிக்கப்பட்டது. இன்று புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவு கூரும் வகையில் இன்று புனித வெள்ளி தினத்தை கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். கிறிஸ்தவர்களை பொறுத்தவரை புனித வெள்ளி என்பது துக்க தினமாகும்.
மக்களுக்காக உயிர் நீத்த இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் புனித வெள்ளி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பல சர்ச்சுகளில் இயேசு கிறிஸ்து மரணத்தை நினைவுப்படுத்தும் சிலுவைப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்களில் இன்று புனித வெள்ளி பிரார்த்தனைகள் நடந்தது.
அதேபோல் பல மாவட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியை கடைப்பிடித்து வருகின்றனர். குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது.
சிலுவையில் இயேசு அறையப்பட்டு உயிர் துறக்கும் முன்பு அவர் பேசிய 7 வார்த்தைகளை மையப்படுத்தி பிரார்த்தனை நடக்கும். சிஎஸ்ஐ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது. கத்தோலிக்க சர்ச்சுகளில் இன்று மாலையில் சிலுவைப்பாதை பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புனித வெள்ளி தினத்தையொட்டி இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இன்று புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படும் நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினம் கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்தவர்களை பொறுத்தவரை இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3வது நாளில் உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கை உள்ளது. அதாவது இயேசு கிறிஸ்து மரணத்தை வென்றார் என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். அந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் நாளாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட உள்ளனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications