சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மர்ம மரண விவகாரம்- சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் தந்தை லத்தீப்
சென்னை: சென்னை ஐஐடி (ஐஐடி மெட்ராஸ்) மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரத்தில் 2 ஆண்டுகளுக்குப் பின்னார் சிபிஐ மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளது. சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் பாத்திமாவின் தந்தை லத்தீப் இன்று விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 2019, நவம்பர் மாதம் அவர் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தேசிய அளவில் உலுக்கியது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது சென்னை போலீஸ். சென்னையின் அப்போதைய போலீஸ் கமிஷ்னர் திரிபாதியை சந்தித்த மாணவியின் தந்தை அப்துல் லத்தீப், '' எனது மகளின் இறப்பு தற்கொலை போல தெரியவில்லை. அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளது. மகளின் இறப்புக்கு நீதி வேண்டும் '' என்று புகார் கொடுத்திருந்தார்.

மாணவர்கள் போராட்டம்
பாத்திமா லத்தீப்பின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். ஐ.ஐ.டி. நிவாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் மர்மங்கள் நிறைந்ததாகவே இருக்கின்றன என்றும் குற்றச்சாட்டுகளை கூறியபடி போராட்டத்தை தீவிரப்படுத்தியிருந்தன மாணவர் அமைப்புகள்.

சிபிஐ விசாரணை
இதற்கிடையே, பாத்திமாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது அப்போதைய தமிழக அரசு. சி.பி.ஐ.யும் வழக்கை ஏற்றுக்கொண்டது.

பேராசிரியருக்கு தொடர்பு?
மாணவியின் குடும்பத்தினர் மற்றும் அவரது தோழிகளிடம் விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தினர். ஒரு குறிப்பிட்ட பேராசிரியர் ஒருவர், மாணவியின் மரணத்தில் தொடர்புடையவராக இருக்கிறார் என அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருந்தது. அவரிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், விசாரணை நடத்தியதாக வெளிப்படையான தகவல்கள் வரவில்லை

இன்று தந்தையிடம் விசாரணை
இந்த வழக்கு கடந்த 2 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், தற்போது வழக்கை மீண்டும் விசாரிக்க துவங்கியிருக்கிறது சி.பி.ஐ. இதற்காக, மாணவியின் தந்தை அப்துல் லத்தீப்பை தங்களின் அலுவலகத்துக்கு அழைத்திருந்தது சிபிஐ. இதனைத் தொடர்ந்து இன்று காலை சென்னை பெசண்ட் நகரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார் லத்தீப். இந்த வழக்கில் சி.பி.ஐ. சேகரித்துள்ள சில ஆதாரங்களின் அடிப்படையில் அப்துல் லத்தீப்பிடம் தெளிவுப்படுத்திக் கொள்ள அவரை சி.பி.ஐ. வரவழைத்துள்ளதாக கூறப்படுகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications