அந்த நாள் வரும்.. ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பதில் சொல்வீர்கள்.. கோபத்தில் பொங்கிய ஸ்டாலின்
டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து டிவிட் செய்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், மாணவர்கள் சிந்திய ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பாஜக பதில் சொல்லியாக வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Recommended Video
சென்னை: டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து டிவிட் செய்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், மாணவர்கள் சிந்திய ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பாஜக பதில் சொல்லியாக வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
குடியுரிமை சட்ட திருத்தம் நாடு முழுக்க பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கான மக்கள் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்னொரு பக்கம் ஐஐடி மாணவர்கள், அலிகார் முஸ்லீம் பல்கலை மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் நேற்று போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டனர்.

திமுக எப்படி
இந்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க திமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இதில் சட்ட நகலை எதிர்த்து திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போராட்டம் செய்தார். 2000 திமுகவினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் அதிர்ச்சி
இந்த நிலையில் டெல்லியில் நடந்த போராட்டம் தொடர்பாக ஸ்டாலின் செய்துள்ள டிவிட்டில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் மோசமாக தாக்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
|
பாஜக ரத்தம்
இங்கு மாணவர்கள் சிந்திய ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் வரும் காலங்களில் பாஜக பதில் சொல்லியாக வேண்டும். குடியுரிமை சட்ட திருத்தத்தை பாஜக மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதற்கு நிறைய எதிர்ப்பு நிலவி வருகிறது, இதற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நிகழ்ந்து வருகிறது, என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமை சட்டம்
முன்னதாக குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். குடியுரிமைச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? என்ற தலைப்பில் இந்த வீடியோ யூ டியூபில் வெளியாகி உள்ளது. இந்த சட்டம் எவ்வளவு கொடுமையானது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications