சிபிஐ இயக்குனரின் கட்டாய விடுப்பு சரியா? தேர்வு கமிட்டியில் நீதிபதி ஏ.கே சிக்ரி நியமனம்!
சென்னை: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் கட்டாய விடுப்பு குறித்து முடிவெடுக்கும் தேர்வு கமிட்டியில் நீதிபதி ஏ.கே சிக்ரி உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதனால் 3 மாதமாக நிலவி வந்த குழப்பம் முடிவிற்கு வந்துள்ளது.

இதனால் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் தனது பணியை தொடங்கி உள்ளார். இன்று காலைதான் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் தனது பணியை தொடங்கினார்.
மத்திய அரசு இந்த வழக்கு மூலம் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. சிபிஐ அதிகாரிகளை தேர்வு செய்யும் அமைப்பான விஜிலென்ஸ் அமைப்புதான், சிபிஐ இயக்குனரின் கட்டாய விடுப்பில் முடிவு எடுத்திருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆனால் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இப்போது எந்த விதமான முக்கிய முடிவுகளும் எடுக்க கூடாது. மூன்று பேர் கொண்ட உயர் தேர்வு கமிட்டி குழு இந்த கட்டாய விடுப்பு குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த கமிட்டி தற்போது உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கமிட்டியின் உறுப்பினராக பிரதமர் மோடி, காங்கிரஸ் லோக் சபா தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் செயல்படுவார்கள். இதில் மூன்றாவது உறுப்பினராக உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமிக்கப்படலாம், அல்லது அவர் நியமிக்கும் நபர் செயல்படலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் அலோக் வெர்மாவின் கட்டாய விடுப்பு குறித்து முடிவெடுக்கும் தேர்வு கமிட்டியில் நீதிபதி ஏ.கே சிக்ரி உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு பதிலாக நீதிபதி ஏ.கே சிக்ரியை உறுப்பினராக நியமித்துள்ளார்.
இந்த கமிட்டி தீர்ப்பு குறித்து ஆய்வு செய்து சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் கட்டாய விடுப்பு குறித்து முடிவெடுக்கும். இதில் பெரும்பாலும் பிரதமர் மோடி, சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் கட்டாய விடுப்பிற்கு ஆதரவாக முடிவெடுப்பார்.
அலோக் வெர்மாவின் கட்டாய விடுப்பிற்கு எதிராக வழக்கு தொடுத்தவர்தான் மல்லிகார்ஜுனா கார்கே என்பதால் அவர் அலோக் வெர்மாவின் கட்டாய விடுப்பிற்கு எதிராக முடிவெடுப்பார். இதனால் நீதிபதி ஏ.கே சிக்ரி எடுக்கும் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications