காங்கிரசுக்கு ஒதுக்க சொல்வதா? அண்ணா அறிவாலயத்தில் அடித்துக்கொண்ட கிள்ளியூர் தொகுதி திமுக நிர்வாகிகள்
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயம் முன்பே திமுக நிர்வாகிகள் இடையே கைகலப்பாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிள்ளியூர் தொகுதியில் கடந்த முறையை போல இந்த முறையும் காங்கிரசுக்கு ஒதுக்கக் கோரி ஒரு தரப்பும், இந்த முறை திமுகவிற்கு ஒதுக்க கோரி ஒரு தரப்பும் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியிருக்கிறது.
கடந்த முறை கிள்ளியூர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

திமுக வேட்பாளர் நேர்காணல்
திமுக சார்பில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நேற்று முதல் நடந்து வருகிறது. திமுக நிர்வாகிகளிடம் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கள நிலவரம் என்ன, யார் போட்டியிடலாம், யாருக்கு வாய்ப்பு வழங்குவது என்பது குறித்து நேரடியாக ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி இன்று வேட்பாளர்கள் நேர்காணல் நடந்தது.
இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்றுவிட்டு அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெளியே வந்ததும் திமுக நிர்வாகிகள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்களுக்கு இடையே கைகலப்பும் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் உண்டானது.
கைகலப்பாக மாறியதால் பரபரப்பு
கிள்ளியூர் சட்டமன்ற தேர்தலில் கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில் இந்த முறை காங்கிரசிடம் இருந்து திமுகவினர் பெற்றுவிட வேண்டும் என நேர்காணலின் போது முதல்வர் ஸ்டாலினிடம் ஒரு தரப்பு திமுக நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும், இன்னொரு தரப்பினர் இந்த முறையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களை போட்டியிட எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை நாங்கள் அவரை வெற்றிபெற வைக்கவும் உழைப்போம் என்றும் மற்றொரு தரப்பு திமுக நிர்வாகிகள் சொல்லியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தான் நேர்காணல் முடிந்து வெளியே வந்ததும், இரு தரப்பு திமுக நிர்வாகிகள் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி கைகலப்பாக மாறியதால் அங்கு பரபரப்பான சூழல் உண்டானது. இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம்












Click it and Unblock the Notifications