12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது.. ரிசல்ட் எப்போது?
சென்னை: 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (ஏப்ரல் 6) தொடங்கி உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் 89 மையங்களில் இன்று முதல் தொடங்கி உள்ளது.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து பொதுத்தேர்வு எழுதிய 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகளை இன்று ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை மேற்கொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 12-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2-ஆம் தேதி முதல் மார்ச் 27 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுதுவதற்கு மாநிலம் முழுவதும் மொத்தம் 7,99,692 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
12 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை முதன்மை தேர்வாளர் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்கள் ஏப்ரல் 6 ஆம் தேதி மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அரசுத் தேர்வு இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள விடைக்குறிப்பில் ஏதேனும் மாற்றம் இருந்தால் தெரிவிக்க வேண்டும்.
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிக்குள் உதவி தேர்வாளர்களாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தம் செய்ய வேண்டும். இந்தப் பணிகளை 20 ஆம் தேதிக்குள் முகாம்களில் முடிக்க வேண்டும் எனவும், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியிடப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்திருந்தது.
அதன்படி, பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் 89 மையங்களில் இன்று முதல் தொடங்கி உள்ளது. மாநிலம் முழுவதும், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
10 ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2 ஆம் தேதி நிறைவடைந்தது. பிரதான பாடங்களுக்கான தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் இன்று (ஏப்ரல் 6) விருப்பப்பாடத் தேர்வு நடைபெறுகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு விடைத்தாள் திருத்தம் செய்யும் பணிக்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications