சுப்பிரமணியன் உடலுக்கு ஓபிஎஸ் நேரில் அஞ்சலி.. காசோலை, பணி நியமன ஆணையை மனைவியிடம் வழங்கினார்
Recommended Video

சென்னை: காஷ்மீரில் வீரமரணமடைந்த இரு வீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்த, தூத்துக்குடிக்கு வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தி ரூ. 20 லட்சம் நிவாரண உதவிக்கான காசோலையையும் , பணி நியமன ஆணையையும் சுப்பிரமணியத்தின் மனைவியிடம் வழங்கினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பகுதிக்கு துணை ராணுவப்படையைச் சேர்ந்த வீரர்கள் 70க்கும் அதிகமான வாகனங்களில் கடந்த வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, புல்வாமா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த போது 350 கிலோ வெடிபொருட்களுடன் எஸ்சுவி காரில் ஏற்றி வந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி துணை ராணுவப்படை வீரர்களின் வாகனத்தில் மீது மோதி வெடிக்கச் செய்தார். இதில், 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

திருச்சி விமான நிலையம்
40 பேரில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவச்சந்திரனும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியனும் வீரமரணமடைந்தனர். இவர்களின் உடல் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் இருவரது உடல்களும் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அஞ்சலி
அங்கு இருவரது உடல்களுக்கும் திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்தினார். அங்கு தமிழிசை சவுந்திரராஜன், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மனைவி
திருச்சி வந்த சுப்பிரமணியனின் உடல் விமானம் மூலம் மதுரை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழி நெடுகிலும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மனைவி, உறவினர்களே உடலை நெருங்க முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதியது.

பணி நியமன ஆணை
பின்னர் தூத்துக்குடிக்கு வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சவலாப்பேரியில் உள்ள சுப்பிரமணியத்தின் வீட்டில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் ரூ. 20 லட்சத்துக்கான காசோலையையும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையையும் அவரது மனைவியிடம் துணை முதல்வர் வழங்கி ஆறுதல் கூறினார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications