எல்லாரும் சிடுசிடு.. ஆனால் பழனிசாமி மட்டும் எப்பவும் புன்னகைதான்.. சொன்னது யார்னு பாருங்க கோப்பால்!
எடப்பாடி பழனிசாமி சிறந்த முதல்வர் என நடிகை சரோஜாதேவி தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: "எல்லாரும் சிடுசிடுவென இருப்பார்கள்... ஆனால் எடப்பாடி பழனிசாமி மட்டும் எப்பவுமே புன்சிரிப்புடன் இருக்கிறார்" என்று நடிகை சரோஜாதேவி தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரசுவதி சரோஜா தேவி. இவர் எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் நெருங்கி பழகியவர். எனினும் எந்த அரசியல் விவகாரங்களிலும் தலையிட மாட்டார்.
யார் முதல்வராக இருந்தாலும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் பாசமும், அன்பும் கலந்தே உறவை வளர்த்தவர். இந்நிலையில், நேற்று சரோஜா தேவி சென்னையில் நடந்த 14வது திருவையாறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

இதுவே முதல்முறை
பின்னர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மெழுகு சிலையையும் திறந்து வைத்து பேசினார். இத்தனை ஆண்டுகளில் தமிழக முதலமைச்சர் ஒருவர் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைப்பது இதுவே முதல்முறை. பின்னர், சிறப்புரையாற்றிய நடிகை சரோஜாதேவி பேசியதாவது:

புன்சிரிப்பு
"நான் இதுவரை எத்தனையோ முதல்வர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் நான் பார்த்த முதல்வர்களில் முகத்தில் எப்போதும் புன்சிரிப்போடு இருப்பவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. மற்றவர்கள் சிடு சிடுவென இருப்பார்கள்.

சந்தோஷமாக இருக்கிறது
கலைஞர்களை மதிப்பவராக, கலைஞர்களுக்கு நல்ல நல்ல விஷயங்கள் செய்ய வேண்டும் என நினைத்து, செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இதைப் பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.தமிழகத்திற்கு என்றைக்கும் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக இருக்க வேண்டும்.

எம்ஜிஆர் மாதிரி
அதற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்னும் நிறைய நல்ல விஷயங்களைச் செய்யவேண்டும். எம்ஜிஆர் மாதிரி, ஏழை மக்களுக்கு பல திட்டங்களை கொண்டு வர வேண்டும், அவர்களுக்கு நிறைய உதவிகளைச் செய்யவேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
இடி, மின்னலுடன் வெளுக்க போகுது மழை! இன்று 4 மாவட்டங்களில் கனமழை அலர்ட்! கோடை வெயிலுக்கு ஜில் அப்டேட் -
“ஜெயிலுக்கு போக இருந்த எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றிய 2 பேர்”.. ஓபிஎஸ் பேச்சு! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications