காவிரியில் வெள்ளப்பெருக்கு.. 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை
சென்னை: காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில் 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
Recommended Video
ஆடிப்பெருக்கு நாளில் காவிரித்தாய் பொங்கிப் பிரவாகமெடுத்து ஓடியதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பண்டிகை கொண்டாடினர். மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 2 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. காவிரி பாயும் மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1.75 லட்சம் கனஅடியாக உள்ள நிலையில், அங்குள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரிக்கும் 25வது நாளாக தடை நீடிக்கிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணை ஏற்கனவே நிரம்பியுள்ளதால், உபரி நீர் முழுவதும் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. உபரி நீர் போக்கியான 16 கண்மதகுகள் வழியாக ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 500 கனஅடியும், அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் 120 அடி தண்ணீர் நிரம்பிய நிலையில் இருந்ததால் உபரிநீர் அனைத்தும் காவிரி ஆற்றில் அப்படியே வெளியேற்றப்பட்டது. ஏற்கனவே, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. பவானியில் கந்தன் நகர், காவிரி வீதி, பசவேஸ்வரர் வீதி, பழைய பாலம் குப்பம், தலைமை நீரேற்று நிலையம் பின்புறம் என கரையோரப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இப்பகுதியில் வசித்த 200க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு மேடான பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பவானி மற்றும் கொடுமுடியில் 270 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. ஈரோடு காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பவானி மற்றும் கொடுமுடியில் 270 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
இதனிடையே காவிரி ஆற்றில் விநாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் 14 மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 14 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications