TET தேர்வு விவகாரத்தில் ஒருபோதும் ஆசிரியர்களை திமுக அரசு கைவிடாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி!
சென்னை: ஆசிரியர்களின் நலன் காத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திராவிட மாடல் அரசு எந்த சூழ்நிலையிலும் ஆசிரியர்களைக் கைவிடாது என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. ஜாக்டோ ஜியோ சங்கம், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் வலியுறுத்தி வருகிறது.

ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு தொடர்பாக சென்னையில் அமைந்துள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளையும் கோரிக்கைகளையும் தெரிவித்தனர். 55க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில், அரசு ஆசிரியர்களின் பணி பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்யப்படாது என்றும் சட்ட விதிமுறைகளின்படி தொடர்ந்து போராடுவோம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்துப் பேசினார். அப்போது திமுக வழக்கறிஞரும், எம்.பி.யுமான வில்சன் உடன் இருந்தார்.
அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்து, 2011-ஆம் ஆண்டிற்கு முன்பு பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியராக பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது குறித்தும், ஆசிரியர்களிடையே ஏற்பட்டுள்ள அச்ச உணர்வினை போக்கும் வகையில் நேற்று தனது தலைமையில் பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது குறித்தும், அக்கூட்டத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகளை முதல்வரிடம் தெரிவித்தார்.
இதைடடுத்து, அடுத்த எடுக்கவேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூறிய முதல்வர் ஸ்டாலின், ஆசிரியர்களின் நலன் காத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திராவிட மாடல் அரசு எந்த சூழ்நிலையிலும் ஆசிரியர்களைக் கைவிடாது என்றும் உறுதியளித்துள்ளார்.
மேலும், விரைவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்து இதுதொடர்பாக முக்கிய கோரிக்கையை முன்வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
-
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications