திருமா இங்கே.. கமல் அங்கே.. அப்போ காங்கிரஸ்? லோக்சபா தேர்தலுக்கு ஸ்டாலின் ஆக்சன்! எல்லாம் முடிஞ்சதே
சென்னை: லோக்சபா தேர்தல் தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சி ஆலோசனை சமீபத்தில் முடிந்த நிலையில் திமுக அளவிலான தமிழ்நாடு கூட்டணி ஆலோசனை விரைவில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இரண்டு பணிகளை செய்ய ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம்.
'இந்தியாவில் லோக்சபா தேர்தல் இந்த முறை முன்கூட்டியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் மே மாதம் தேர்தல் நடக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பாக ஜனவரி மாதம் அல்லது டிசம்பர் மாதம் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்கூட்டியே தேர்தலை நடத்தினால் இந்திய கூட்டணியை வளர்ச்சி அடைய விடாமல் தடுக்க முடியும் என்பதால் பாஜக இந்த திட்டத்தில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் - திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று உள்ளன.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியின் 3-வது கூட்டம் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இதில் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்து 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த கூட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது
லோக்சபா தேர்தல்: லோக்சபா தேர்தல் தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சி ஆலோசனை சமீபத்தில் முடிந்த நிலையில் திமுக அளவிலான தமிழ்நாடு கூட்டணி ஆலோசனை விரைவில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் ஸ்டாலின் பின்வரும் ஆலோசனைகளை செய்யும் வாய்ப்புகள் உள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு இடம் கொடுப்பது. யார் யாருக்கு இடம் கொடுப்பது. எங்கே வேட்பாளர்களை நிறுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசனை செய்யப்படலாம்.

முக்கியமாக கூட்டணியில் இருக்கும் முக்கியமான தலைவர்களுக்கு இப்போதே தேர்தல் பணிகளை செய்வது தொடர்பாகவும் ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
கூட்டணி ஆய்வு சர்வே: அதன்படி இரண்டு பணிகளை செய்ய ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். முதல் பணி திமுகவின் இப்போதைய எம்பிக்கள் மதிப்பெண். அவர்களுக்கு மக்களிடம் உள்ள ஆதரவு. மீண்டும் போட்டியிட்டால் வாய்ப்பு கிடைக்குமா என்ற சர்வே.
அதோடு திமுக கூடுதல் தொகுதிகளில் களமிறங்கினால் எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குவது என்பது பற்றியும் சர்வே எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பூத் கமிட்டி அடிப்படையில் ஒதுக்கீடு: இரண்டாவதாக பூத் கமிட்டி அடிப்படையில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். அதன்படி கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் தங்களுக்கு பூத் கமிட்டி வலுவாக உள்ளது என்பதை லிஸ்ட்டாக கொடுக்க வேண்டும்.
பூத் கமிட்டி உள்ள இடங்களில் மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்ற முடிவை ஸ்டாலின் எடுத்துள்ளாராம். இந்த இரண்டு பணிகளையும் முடிக்கும் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக கூறப்படுகிறது.
எங்கெங்கே யார் யார் போட்டியிடுவார்கள்?: 2024 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக கமல்ஹாசன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தொகுதி ஒன்றும் டிக் அடிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
அதாவது நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக கோவையில் இவர் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று செய்திகள் வந்தன. சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் நூலிழையில்தான் கமல் வானதி சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார். அப்போது அவர் கூட்டணியில் இல்லை. இப்போது காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டால் கமலுக்கு வெற்றி வாய்ப்புகளும் உள்ளன. பாரத் ஜோடோ யாத்திரையிலும் இவர் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக காணப்பட்டார்.
கமல்ஹாசனை தென் சென்னையில் களமிறக்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தென்சென்னையில் கமல்ஹாசன் லோக்சபா தேர்தலில் வேட்பாளராக களமிறக்கப்படுவார். மக்கள் நீதி மய்யம் சின்னத்தில் திமுக வேட்பாளராக இவர் களமிறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் சார்பாக சிவகங்கை கார்த்திக் சிதம்பரத்திற்கும், நாகர்கோவில் விஜய் வசந்த்திற்கும் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ராமநாதபுரம் மாணிக்கம் தாகூருக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இங்கே மோடி போட்டியிட உள்ளதாக பேச்சு வரும் நிலையில், இஸ்லாமிய கட்சிகளுக்கு பதிலாக இங்கே காங்கிரஸ் இறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இது போக, திருச்சி, நெல்லை, திருவள்ளூர், தென்காசி, மதுரை ஆகிய தொகுதிகளுக்கு இந்த முறை திமுக களமிறங்கும் என்று பாராளுமன்ற தேர்தல் திமுக என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இங்கே பூத் கமிட்டி அமைக்கப்பட்டு தேர்தல் சர்வே பணிகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதை பற்றி கூட்டணி தலைவர்களுடன் ஸ்டாலின் விரைவில் ஆலோசனை செய்வார் என்று கூறப்படுகிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications