சிக்சர்! இப்ப வருமோ.. எப்ப வருமோ.. காத்திருந்த டெல்டா மக்களின் மனக்குறையை தீர்த்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : டெல்டா மாவட்ட திமுகவினர் மற்றும் பொதுமக்களின் மனக்குமுறலைத் தீர்த்து வைத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். தமிழ்நாடு அமைச்சரவையில் டெல்டா மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அமைச்சர்கள் யாரும் இல்லாமல் இருந்த நிலையில் டிஆர்பி ராஜாவின் நியமனம் மூலம் இந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஆவடி நாசரை விடுவித்து, மன்னார்குடி எம்.எல்.ஏ-வாக இருக்கும் டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அதன்படி மே 11 ஆம் தேதி, காலை 10.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்க உள்ளார்.

டெல்டாவுக்கு பிரதிநிதித்துவம் : டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அமைச்சர்கள் யாரும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது டி.ஆர்.பி ராஜா அமைச்சராவதன் மூலம் டெல்டா மாவட்டத்திற்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைக்கிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திமுக எம்எல்ஏக்கள் யாருக்குமே அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. இதனால், டெல்டா மாவட்ட திமுகவினர் அதிருப்தி அடைந்தனர்.
18ல் 15 : 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில் டெல்டா மாவட்டங்களுக்கு அமைச்சர் கிடைக்காதது அந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கும், கட்சியினருக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இத்தனைக்கும், ஒருங்கிணைந்த காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மொத்தமுள்ள 18 தொகுதிகளில் 15 தொகுதிகளைத் திமுக கூட்டணி கைப்பற்றியது.
கைவிடாத டெல்டா : டெல்டா மாவட்டங்களில் திமுகவின் அமைச்சரவையில் திருவையாறு துரை.சந்திரசேகரன், கும்பகோணம் சாக்கோட்டை க.அன்பழகன், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, திருவாரூர் பூண்டி கலைவாணன், பட்டுக்கோட்டை கா.அண்ணாத்துரை ஆகியோரில் சிலர் பெயர்கள் இடம்பெறக்கூடும் எனத் திமுகவினரால் அப்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒருவர் பெயர் கூட இடம்பெறாததால் திமுகவினரும், டெல்டா மாவட்ட மக்களும் அதிருப்தி அடைந்தனர்.
ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் டெல்டா மாவட்டங்கள், திமுகவை கைகொடுத்துக் காப்பாற்றியுள்ளன. 2011-ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் திமுகவைச் சேர்ந்த 23 பேர் மட்டுமே வெற்றி பெற்ற நிலையிலும் கூட திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய தொகுதிகளில் திமுக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். ம்றைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூரும் இந்த முறை அமைச்சரவையில் புறக்கணிக்கப்பட்டது.
டெல்டா அதிருப்திக் குரல் : திமுகவுக்கு எப்போதும் சாதகமாக இருக்கும் டெல்டா மாவட்டங்களை அமைச்சரவையில் புறக்கணித்தது சலசலப்புகளை ஏற்படுத்தியது. ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களில் இருந்து யாரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை என கவலைப்பட வேண்டாம், உங்கள் மாவட்டத்தில் இருந்து தான் நான் இன்று முதலமைச்சராகி இருக்கிறேன் என சென்டிமென்ட்டாகப் பேசினார்.
எனினும், அமைச்சரவை மாற்றங்கள் தொடர்பான பேச்சுகள் எழும் போதெல்லாம், டெல்டா மாவட்ட எம்.எல்.ஏக்கள், தங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என நப்பாசையுடன் இருந்து வந்தனர். கடந்த டிசம்பரில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டபோதும் டெல்டாவுக்கு இடம் கிடைக்கவில்லை.
குட் நியூஸ் : இந்நிலையில், தற்போதைய அமைச்சரவை மாற்றத்தில் மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா இடம்பிடித்துள்ளார். மன்னார்குடி தொகுதியில் மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ ஆன டி.ஆர்.பி.ராஜா, முதல்வர் ஸ்டாலினின் குட்புக்கில் இருப்பதால் அவர் அமைச்சரவையில் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அப்போது யோகம் அடிக்கவில்லை.
இந்நிலையில், ஐடி விங் பணிகளை தீவிரப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வரும் டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதன்மூலம், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவின் எதிர்பார்ப்பு இந்த முறை பலித்துள்ளது. திமுகவை எப்போதும் கைவிடாத டெல்டாவுக்கு மகிழ்ச்சியான செய்தியைக் கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
-
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications