10 நாள்களில் பறந்த உத்தரவு - முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன மாணவி
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் போகும் ஊர்களில் எல்லாம் மக்கள் குறைகளை மனுக்களாகப் பெற்றுவருகிறார். அப்படிப் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்துவருகிறார்.
நேரடியாக அவரது பார்வைக்கு வரும் மனுக்கள் மீது மின்னல் வேக நடவடிக்கை என்பது பலரையும் இந்த ஆட்சி நிர்வாகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அப்படி ஒரு இன்ப அதிர்ச்சியை மாணவி இராஜேஸ்வரி புகழேந்திக்கு அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

கடந்த சில வாரங்கள் முன்னதாக திருச்சிக்குத் தொகுதியில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளைப் பார்வையிடுவதற்காக களப்பணி சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது அவரிடம் திருச்சி சங்கலியாண்டபுரம் பகுதியில் வசித்துவரும் மாணவி இராஜேஸ்வரியின் தாய் சுந்தரவல்லி புகழேந்தி ஒரு மனுவை நேரில் வழங்கி இருந்தார்.
தனது மகள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயர்படிப்பில் சேர்வதற்காக முதல் வருடக் கட்டணமான முழுத் தொகையைக் கட்டி இருந்தார். ஆனால், அந்தப் பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக வேறு கல்லூரியில் சேர்ந்துவிட்டார். ஆனாலும் காலம் கடந்தநிலையில், இன்னும் அந்தத் தொகை திருப்பி அளிக்கப்படவில்லை.

காலதாமதம் ஏற்பட்டுவருகிறது. இதனால் எங்கள் மகளின் படிப்பை மேற்கொண்டு தொடர பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகவே தாங்கள் தக்க நடவடிக்கை எடுத்து உதவுமாறு மனுவில் கூறி இருந்தார்.
அந்த மனுமீது உடனடியாக நடவடிக்கையை எடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இன்று அந்த மாணவி உட்பட அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏறக்குறைய பத்து பேருக்கு அவர்கள் கட்டிய பணம் போய்ச் சேர்ந்துள்ளது. அதுவும் பத்தே நாள்களில்.

ஆகவே மிகுந்த மகிழ்ச்சியுள்ளது மாணவி இராஜேஸ்வரியின் குடும்பம். உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்காக இராஜேஸ்வரியும் முதல்வருக்கு நன்றி கடிதத்தை நேரில் அளித்துள்ளார். அதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த நன்றி கடிதத்திற்காக அம்மாணவியைத் தொலைபேசியில் அழைத்து முதல்வர் பாராட்டியும் உள்ளார்.
நாம் அந்தப் பயனாளி மாணவி இராஜேஸ்வரியிடம் பேசினோம். அவர், "நான் கடந்த கல்வியாண்டில் பட்டப்படிப்புக்காகப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அதன்பின் வேறு படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என யோசித்து, தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பினை தேர்ந்தெடுத்து அங்குச் சேர்ந்துவிட்டேன்.

முதல் ஆண்டுக்கான முழுத் தொகையையும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கட்டி இருந்தேன். அந்தத் தொகையை மீண்டும் அளிக்குமாறு பலமுறை நிர்வாகத்தினரிடம் முறையிட்டேன். ஆனால், வழங்கப்படவில்லை. அதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
ஆகவே, திருச்சி வந்த முதல்வரிடம் எனது தாயார் மனு அளித்திருந்தார். இது கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. நாங்கள் மனு அளித்த பத்தே நாள்களில் பல்கலைக்கழக நிர்வாகத்திலிருந்து அழைப்பு வந்தது. முதல்வரிடம் மனு அளித்தீர்களா என விசாரித்தனர். ஆம் என்றேன். உடனடியாக முழுத் தொகையையும் திருப்பி அளித்துவிட்டனர். என்னைப் போல சுமார் 15 மாணவர்களுக்குக் கட்டிய தொகை திரும்பக் கிடைத்துள்ளது" என்கிறார்.
அவரைத் தொடர்ந்து அவரது தந்தையிடம் பேசினோம், அவர், "முதல்வராகப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து ஸ்டாலின் நிறையத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அதனால்தான் நாங்களும் அவரிடம் முறையிடலாம் என மனு அளித்தோம். என் மனைவிதான் அளித்தார். அவரது அதிரடியான நடவடிக்கையால் பணம் மீண்டும் கிடைத்துள்ளது.

அந்தத் தொகையை அப்படியே என் மகள் இரண்டாம் கல்வியாண்டுக்கான கட்டணமாகச் செலுத்திவிட்டேன். இந்தத் தொகை வரவில்லை என்றால் கொஞ்சம் சிரமப்பட்டு இருப்போம்.
இதில் எங்கள் முயற்சியால் பல பிள்ளைகளும் பயன்பெற்றுள்ளனர். அதில் எங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி" என்கிறார்.

இதற்கு முன்பாக இவர் தங்கள் ஊர் பைபாஸ் சாலையின் வழியே பயணிக்கும் பேருந்துகள் குறிப்பிட்ட இடத்தில் பயணிகளை இறக்கிவிடுவதில்லை. ஆகவே பாதிக்கப்படுகிறோம் என மனு அளித்துள்ளார். அந்தக் கோரிகையும் நடைமுறைப்படுத்த அதிரடியாக முதல்வர் உத்தரவு இட்டுள்ளார்.
எந்த முனையிலிருந்து தனது பார்வைக்கு ஒரு மனு வந்தாலும் அந்த மனுவுக்கான ஆக்ஷன் மின்னல் வேகத்தில் எடுக்கப்படுகிறது. இந்த மாற்றம் இதுவரை தமிழ்நாடு பார்க்காத மாபெரும் மாற்றம் மட்டும் அல்ல; மகிழ்ச்சியான மாற்றம்.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்!












Click it and Unblock the Notifications