75 ஆவது சுதந்திர தினம்: முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
Recommended Video
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்றைய தினம் ஆட்சி அமைத்து 100 நாட்களான நிலையில் இன்றைய தினம் முதல் முறையாக முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றுகிறார்.

தமிழக தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை 9 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றினார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மாணவர்கள், தியாகிகளுக்கு அழைப்பில்லை.

கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலினை தலைமை செயலாளர் இறையன்பு வரவேற்றார். பின்னர் காவல் துறை மற்றும் உயரதிகாரிகளை தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார். காவல் துறை உள்பட 7 துறைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

காவல் துறை அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். இதையடுத்து தேசியக் கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றினார். இந்த விழாவில் எம்எல்ஏக்கள், அதிகாரிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications