வேலூரில் மினி டைடல் பார்க்.. காணொலி மூலம் இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்
வேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகள்தான் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன.
சென்னை: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை தமிழ்நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு விரிவுபடுத்தும் முயற்சியாக வேலூரில் அமைய உள்ள மினி டைடல் பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

தமிழ்நாட்டில் வேலூர், தூத்துக்குடி, திருப்பூர், விழுப்புரம் மற்றும் சேலம் மாவட்டங்களில் இந்த டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று சட்டப் பேரவையில் கடந்த ஆண்டு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். இதனை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) சென்னை டைடல் பார்க்குடன் சேர்ந்து கூட்டு முயற்சியாக செயல்படுத்தும். இதற்காக சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் சதுர அடியில் கட்டுமான பணிகள் தொடங்க இருக்கின்றன.
வேலூர் மாவட்டத்தில் அப்துல்லாபுரம் மற்றும் மௌனவூர் பகுதியில் இந்த பூங்கா அமைய இருக்கிறது. ரூ.70 கோடி மதிப்பீட்டில் உருவாக உள்ள இந்த பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்தவாறு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார். ஏற்கெனவே வேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகள் மூலம் ஓரளவு வேலை வாய்ப்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது உருவாக்கப்படும் இந்த மினி டைடல் பார்க் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications