கோவைக்கும், மதுரைக்கும்.. மெட்ரோ ரயிலை கொண்டு வருவோம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை: போதுமான மக்கள் தொகை இல்லை என்று கூறி கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்திருந்தது. இந்நிலையில் இந்த இரு நகரங்களுக்கும் மெட்ரோ ரயிலை கொண்டுவருவேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
அனைவருக்கும் பொதுவானதாக செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு என்றும் முதலமைச்சர் சாடியுள்ளார்.

இது குறித்து தனது x பக்கத்தில், "'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம்!" என்று தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications