Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாழ்ந்து கிடந்த தமிழகத்தை உயர்த்திட! அறிவு சூரியனாய் வந்த கருணாநிதி பிறந்தநாள்! ஸ்டாலின் புகழாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்! என முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாட திமுக பொதுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

m karunanidhi mk stalin tamil nadu

மதுரையில் 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முதல் தீர்மானமாக முத்தமிழறிஞர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்று கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர் கருணாநிதியின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடக்கும் செம்மொழி விழாவில் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய நூல்கள் வெளியிடுதல், வயது முதிர்ந்த 5 தமிழறிஞர்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை ஒப்பளிப்பு ஆணை வழங்குதல், செம்மொழி நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குதல், தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலர் வெளியிடுதல் ஆகிய நிகழ்வுகளும் பிரமாண்டமாக அரங்கேறுகின்றன.

2004-ம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நாடாளுமன்றத்தில் தமிழை செம்மொழியாக அறிவித்து அந்த மொழிக்கு மகுடம் சூட்டினார். இதற்கு முழு காரணம் முதல்வராக இருந்த கருணாநிதிதான். இந்த நிலையில் அவருடைய பிறந்தநாளில் ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

m karunanidhi mk stalin tamil nadu

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்!

முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் #செம்மொழிநாள்!

ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து - இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்! இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+