நொந்து கிடக்கும் அதிமுகவினர்தான் அந்த தியாகி.. சட்டசபையில் ஸ்டாலின் சரமாரி பதிலடி
சென்னை: அதிமுகவினர்தான் அந்த தியாகி என தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். அதிமுகவினர், யார் தியாகி என்ற பதாகை ஏந்தி வந்த நிலையில் ஸ்டாலின் பதில் கொடுத்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் ஊழல் நடைபெறுவதைக் குறிக்கும் வகையில் அந்த தியாகி யார் என எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வந்திருந்தனர்.

சட்டசபையில் இன்று டாஸ்மாக் ஊழல் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு பேரவைத் தலைவர் அப்பாவு அனுமதி தரவில்லை. இதனால் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
மக்களுக்கு ரூ 1000 கொடுப்பது போல் கொடுத்து ரூ 1000 கோடி ஊழல் செய்த தியாகி யார் என கேட்டு அதிமுகவினர் அமளி செய்தனர். அப்போது அவர்களை இன்று ஒரு நாள் முழுவதும் அவையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து அந்த தியாகி யார் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிலளிப்பதாக தெரிவித்தார். அவர் பேசுகையில் மறைந்த எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, மறைந்த ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுகவை அதற்கு பிறகு பொறுப்பேற்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடியவர், தாங்கள் சிக்கியிருக்கக் கூடிய பல்வேற வழக்குகளில் இருந்து பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக யார் காலில் போய் விழுந்தார்களோ அவ்வாறு விழுந்த நேரத்தில் அதனை பார்த்து நொந்து நூடுஸ்ஸாகி போன அதிமுக தொண்டர்கள்தான் இன்றைய தியாகிகளாக இருக்கிறார்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிமுகவினரின் சஸ்பெண்ட்டை நீக்குமாறும் சபாநாயகர் அப்பாவுவிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையும் விடுத்திருந்தார். இரு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று கூடியது. இந்த நிலையில் அதிமுகவினர் முதல் நாளே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் அண்மையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 3 நாட்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத் துறை வெளியிட்டது.
அதில் தமிழகத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதாகவும் டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்தது.
டாஸ்மாக் அலுவலர்களுக்கு மது ஆலைகள் லஞ்சம் வழங்கியது, கொள்முதலை குறைத்து கணக்கு காட்டியது, பணியிட மாற்றம், பார் லைசன்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications