முதல்வர் ஸ்டாலின் அடுத்த விசிட்! சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் கள ஆய்வு! ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் ஜனவரி 21, 22 ஆகிய 2 நாட்கள் சிவகங்கையில் கள ஆய்வு நடத்துகிறார். சிவகங்கை நடைபெறும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக அரசு துறைகளில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன்படி வரும் ஜனவரி 21, 22 ஆகிய இரு நாட்கள் சிவகங்கை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார்.

ஜனவரி 21 ல் காரைக்குடி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிரமாண்டமாக கட்டியுள்ள தமிழ் நுாலக கட்டடத்தை திறந்து வைக்கிறார்.
காரைக்குடியில் அன்று இரவு தங்கும் முதல்வர் ஸ்டாலின், ஜனவரி 22 ஆம் தேதி காலை சிவகங்கை வருகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் துறை ரீதியான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று விட்டு, மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி வளாகத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். பல்வேறு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார்.
முதல்வர் வருகைக்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications