Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 மணி நேரம்தான் தூக்கம்.. போனை போட்டு விளாசிய ஸ்டாலின்.. விக்கித்த தலைகள்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் நெருங்கி வருகிறது. அதிக நாட்கள் இல்லை. ஜஸ்ட் 1 வாரம் தான் இருக்கிறது. இந்த நிலையில், தேர்தல் குறித்த அதிக பளுவை சுமந்து கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தான் உறங்குகிறார். 20 மணி நேரமும் தேர்தல், பிரச்சாரம், தொகுதிகளின் நிலவரம் குறித்த விசாரணை என ஒரே சிந்தனையில் தான் செயலாற்றி வருகிறார் என்கின்றனர் விபரமறிந்த உடன்பிறப்புகள்.

தமிழகத்தை சென்னை, வடக்கு, மேற்கு, டெல்டா மற்றும் தெற்கு என மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திலும் நிலவரம் என்ன? என்பது பற்றி தினமும் விசாரணை நடத்தி வருகிறார் ஸ்டாலின். இந்த மண்ட லங்கள் குறித்து தமக்கு அளிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், எந்தெந்த பகுதிகளில் பலவீனமாக திமுக இருக்கிறது என சொல்லப்படுகிற ரிப்போர்ட்டை வைத்து அந்த பகுதிகளின் பொறுப்பாளர்களை ஃபோனில் பிடித்து லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார். பதில் சொல்ல முடியாமல் திணறு கிறார்கள் பொறுப்பாளர்கள்.

CM Stalin

சமீபத்தில், டெல்டா மாவட்டங்களில் சசிகலா தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் திமுகவுக்கு பாதகமா?சாதகமா? என பொறுப்பாளர் களிடம் விசாரித்துள்ளார். அப்போது, திமுகவுக்கு சாதகம் தலைவரே. முக்குலத்தோர் வாக்குகள் அதிமுக பக்கம் போகாமல் சசிகலா தடுப்பதால், அது, நமது வெற்றிக்கு சாதகமாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள்.

நிர்வாகிகள் சிலர், "தலைவரே... டெல்டாவில் சசிகலா தரப்பினர் வேட்பாளர்களை நிறுத்துவது நமக்கு செம ப்ளஸ். அதிமுக-வுக்கு விழ வேண்டிய முக்குலத்தோர் வாக்குகளை அவர்கள் பிரிப்பார்கள். இதனால் அதிமுக பலவீனப்படும், நாம் ஈஸியாக ஜெயித்துவிடலாம்" எனத் தெம்பாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இதனை ஏற்க மறுத்த ஸ்டாலின், கடந்த 5 ஆண்டுகளில் டெல்டா மாவட்டங்களுக்கு திமுக தான் அதிக திட்டங்களையும், அறிவிப்புகளையும் செய்திருக்கிறது. முக்குலத்தோர் நமது ஆதரவாளர்களாக மாறியிருக்கிறார் கள். அப்படியிருக்க, சசிகலா தரப்பினர் களத்தில் நிற்பது, திமுகவுக்கு பாதகம் ஆகாதா? என்று எதிர்கேள்விக் கேட்டதற்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்துள்ளனர்.

ஸ்டாலினின் 'எதிர்' கேள்வி!
நிர்வாகிகள் சொன்ன "வாக்கு பிரிப்பு" லாஜிக்கை சுக்குநூறாக உடைத்த ஸ்டாலின், "சசிகலா தரப்பு களத்தில் நிற்பது திமுக-வுக்குப் பாதகமாக அமைய வாய்ப்பு இல்லையா?" என்று எக்ஸ்ரே எடுத்தாற்போலக் கேட்க, பதில் சொல்ல முடியாமல் நிர்வாகிகள் சைலண்ட் மோடுக்கு மாறியுள்ளனர்.

"ஒரு ஓட்டு கூட மிஸ் ஆகக்கூடாது!"
வெறும் கேள்வியோடு நிறுத்தாமல், டெல்டா பொறுப்பாளர்களுக்கு ஸ்ட்ரிக்ட் வார்னிங் கொடுத்திருக்கிறார் முதல்வர்.

"டெல்டாவில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்."

"திமுக ஆதரவு வாக்குகளில் ஒரு ஓட்டு கூட மாற்றுத் தரப்புக்கோ அல்லது எதிரணிக்கோ சென்றுவிடக் கூடாது."

"யார் ஓட்டைப் பிரிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல; நம்மிடம் இருக்கும் வாக்குகள் சிதறாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்." அதனால், டெல்டா மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். திமுக ஆதரவு வாக்குகளில் ஒர் ஓட்டுக்கூட எதிரணிக்குச் செல்லக்கூடாது என எச்சரிக்கை செய்திருக்கிறார் ஸ்டாலின்.

எதிரணியின் பலவீனத்தை நம்பி இருக்காமல், தனது பலத்தைத் தக்கவைக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் காட்டிய இந்தத் தெளிவு, டெல்டா உடன்பிறப்புகளை இப்போது அலர்ட் ஆக்கியிருக்கிறது.

- சிறப்பு நிருபர் எழில்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+