ஆளுநர் விவகாரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு! சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் உரை
சென்னை: 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது வரவேற்கத்தக்கது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இது தமிழகம் மட்டுமில்லை ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள மாநில அரசுகளுக்கும் கிடைத்த தீர்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. தமிழக சட்டபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவது , துணை வேந்தர்கள் நியமனத்தில் குறுக்கீடு உள்ளிட்டவைகளை முன்வைத்து இந்த வழக்கு தொடரப்பட்டது.

இதன் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது மாநில சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பினால் மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பும் போது குடியரசுத் தலைவரக்கு அனுப்ப அதிகாரம் இருக்கிறதா? மாநில அரசின் அதிகாரத்தின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட மசோதாக்களை மட்டுமே அனுப்ப முடியுமா?
அனைத்து மசோதாக்களையும் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்க இயலுமா? உள்ளிட்ட கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் நேர்மையானதாக இல்லை. அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. தமிழக அரசின் 10 மசோதாக்களை நிறுத்தி வைத்து குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது சட்டவிரோதம் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் இந்த தீர்ப்பை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். அவர் பேசுகையில் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை நிலைநாட்ட தமிழகம் தொடர்ந்து போராடும். தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள மாநில அரசுகளுக்கு கிடைத்த தீர்ப்பு.
ஆளுநர் விவகாரத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளது. தமிழக அரசின் வாதத்தில் இருந்த நியாயத்தை ஏற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications