இனி 8 ஆம் வகுப்பு வரை காலை உணவு.. திமுக திட்டத்தை விரிவாக்கம் செய்யும் முதல்வர் விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம், தற்போது 5-ஆம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இனி 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் இந்த திட்ட விரிவாக்கம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay Announces Expansion of Breakfast Scheme Up to Class 8 from September 17

முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியருக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தை முதல்வர் விஜய் விரிவுபடுத்தியுள்ளார். இதன்படி, இனி 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி பெரியார் பிறந்த நாள் முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை உணவு திட்டத்தால் பள்ளி குழந்தைகள் பெரிதும் பயன்பெற்ற நிலையில், இந்த திட்டத்தினை விரிவாக்கம் செய்து அறிவித்துள்ளது தமிழக அரசு.

ஆய்வுக் கூட்டம்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கையை தொடங்கவும் துறை அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று விரிவாக்கம் செய்யப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் தலைமையில் இன்று (15.06.2026) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின்கீழ் செயல்பட்டுவரும் சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை ஆகிய துறைகளின் மூலம் குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோரது நலனிற்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் இல்லங்கள், பல்வேறு திட்டங்கள், சமூக சட்டங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் குழந்தைகள் மையங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

செப்டம்பர் 17 ம் தேதி முதல்

"வெற்றித் தமிழகம்" தொலைநோக்கு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள துறை சார்பாக செயல்படுத்தக்கூடிய திட்டங்கள், அதற்குத் தேவைப்படும் நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய (One Stop Centre) செயல்பாடுகள், தத்தெடுக்கும் மையங்கள், மகளிர், குழந்தைகள், மூத்தகுடிமக்கள் ஆகியோருக்காக செயல்படுத்தப்படும் உதவி எண்கள், குழந்தைகளுக்கான காலை மற்றும் மதிய உணவுத் திட்டம், அங்கன்வாடி மையச் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை, தொடர்புடைய பயனாளர்களான குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மூத்தகுடிமக்களிடம் தடையின்றி மற்றும் துரிதமாகக் கொண்டு சேர்க்கவேண்டும் எனவும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாகாதபடி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், மேற்படி பழக்கத்திற்கு ஆளான குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு உரிய மறுவாழ்வு அளித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.

மேலும், "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை" 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விரிவாக்கம் செய்திட ஏதுவாக, தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி இத்திட்டத்தினை முதற்கட்டமாக தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

பங்கேற்ற அதிகாரிகள்

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு. ஜெகதீஸ்வரி, தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. எம்.ஏ. சித்திக், இ.ஆ.ப., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைச் செயலாளர் திருமதி ம. பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., சமூகநலத்துறை இயக்குநர் திருமதி மகேஸ்வரி ரவிக்குமார், இ.ஆ.ப., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் செயலாளர் திருமதி ச. வளர்மதி, இ.ஆ.ப., ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் திருமதி ஜெ.சா. மெர்சி ரம்யா, இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+