திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்?
சென்னை: முதல்வர் சி. ஜோசப் விஜய், மாநிலப் பொருளாதாரத்தை உயர்த்த ஒரு மாஸ்டர் பிளானை தீட்டியுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே புகழ்பெற்ற பொருளாதார ஆலோசகர்கள், முன்னணி முதலீட்டாளர்கள் மற்றும் கார்ப்பரேட் தலைவர்களுடன் ரகசிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நடவடிக்கை தமிழகத்தை இந்தியாவின் முன்னணி முதலீட்டு மையமாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய அமைச்சரவையில் பலருக்கு தொழில் துறை மற்றும் உலகளாவிய பொருளாதார அனுபவம் குறைவு என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அதை பலவீனமாகப் பார்க்காமல் வாய்ப்பாக மாற்றி விஜய் செயல்பட்டு வருகிறார். "அரசியல் அனுபவக் குறைவை அறிவார்ந்த நிபுணர்களின் வழிகாட்டுதலால் சரிசெய்ய முடியும்" என்பது அவரது உறுதியான நம்பிக்கை. தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவலின்படி, முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது முக்கிய குழு உறுப்பினர்கள் தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகள் மற்றும் ரகசிய சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (FICCI), மெட்ராஸ் வர்த்தக மற்றும் தொழில் சபை (MCCI) உள்ளிட்ட உயர்மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அவர் தொடர் ஆலோசனைகளை நடத்தியுள்ளார். அனுபவமற்ற அமைச்சர்கள் என்ற விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில் அரசு வட்டாரங்கள் கூறியுள்ளதாவது, "அனைத்தையும் தெரிந்தவர் யாரும் இல்லை. தகுதியான நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு நேர்மையான முடிவுகளை எடுப்பதே உண்மையான தலைமைப் பண்பு. முதலமைச்சர் விஜய் அதைத்தான் செய்து வருகிறார்" என்பதாகும்.
மாநிலத்தின் நிதி நெருக்கடியை சீரமைக்கவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் உலகத் தரம் வாய்ந்த Advisory Council ஒன்றை உருவாக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த குழு தமிழகத்தின் பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைக்க முக்கியப் பங்கு வகிக்கும்.
உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சிகள்
தமிழகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு, புதிய தொழில் பூங்காக்கள் உருவாக்கம் உள்ளிட்டவற்றுக்கு பெரும் மூலதனம் தேவை. இதற்காக டாடா, ரிலையன்ஸ் உள்ளிட்ட இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமின்றி, உலகளாவிய Venture Capitalists உடனும் நேரடி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. செமிகண்டக்டர் வடிவமைப்பு, மின்சார வாகனங்கள் (EV) உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன் மற்றும் மேம்பட்ட மின்னணுப் பொருட்கள் தயாரிப்பு ஆகிய அதிநவீனத் துறைகளில் தமிழகத்தை இந்தியாவின் முன்னோடி மாநிலமாக்க விஜய் இலக்கு வைத்துள்ளார்
.
தொழில் தொடங்கும் நடைமுறைகளை எளிதாக்குதல் (Ease of Doing Business), ஒற்றைச் சாளர அனுமதியில் தாமதங்களைத் தவிர்த்தல், லஞ்ச ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் ஆகியவற்றை முதலீட்டாளர்களுக்கு உறுதி அளித்து வருகிறார் முதலமைச்சர். இந்த அணுகுமுறை கார்ப்பரேட் உலகில் புதிய அரசின் மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
MSME மற்றும் கிராமப்புற மேம்பாடு
பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் முதுகெலும்பாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் (MSME) வளர்ச்சிக்கும் சிறப்பு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, ஓசூர் உள்ளிட்ட தொழில் நகரங்களின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தனித்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப ஆளுமை பரவலாக்கம் ஆகியவை முக்கியத்துவம் பெற்றுள்ளன.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பாதையில் மக்கள் செல்வாக்குடன் ஆட்சி அமைத்துள்ள விஜய், நிர்வாகத் திறனிலும் சாதனை புரிய துடித்து வருகிறார். "ஆட்சிப் பொறுப்புக்கு வந்த குறுகிய காலத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இப்போது நிதி நிலையை சீரமைத்து தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதே எங்கள் முன்னுரிமை" என தவிக வட்டாரங்கள் தெரிவித்தன.
முதலமைச்சர் விஜய்யின் இந்த 'கார்ப்பரேட் ஸ்டைல்' நிர்வாக முயற்சிகள், நிபுணர்களின் அறிவையும் மக்கள் செல்வாக்கையும் இணைத்து தமிழகத்தை பொருளாதார உச்சத்துக்கு கொண்டு செல்லும் என பொருளாதார வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தமிழகத்தின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
-
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
எச்டி ஹூண்டாய் தூத்துக்குடி திட்டம் இன்னும் ‘கன்பார்ம்’ ஆகல! குண்டை போட்ட கொரிய தலைவர் KIM! -
ஸ்டியரிங்கை பிடித்த விஜய்.. 'சிங்கப்பெண்' திட்டத்தை தொடங்கி வைத்து கையோடு ரோந்து வாகனத்தை ஓட்டினார்! -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
ஸ்மார்ட் மீட்டர், பரந்தூர், ECR பாலம்! முக்கிய திட்டங்களை முடக்கிய விஜய்! தமிழ்நாட்டிற்கு பேராபத்து -
விஜய், சுந்தர் சியின் முடிவு.. சூழ்ச்சி இருக்கு! சொல்லுறதை நம்ப முடியல! ரகசியங்களை உடைத்த நடிகர் இளவரசு -
பாஜக கோபத்திற்கு ஆளாக நேரிடும்! இந்தியா கூட்டத்திற்கு தவெக போகாதது ஏன்? விஜய் எடுத்த பயங்கர முடிவு?












Click it and Unblock the Notifications