விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்!
முதலமைச்சர் விஜய் தனது 3 நாள் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய கையோடு, மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை வேகமாக முடிக்க அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி அயோக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய விஜய் தமிழகத்திற்கான நிதிப் பங்கீடுகள் குறித்து விரிவாகப் பேசிவிட்டு வந்த நிலையில், தற்போது தமிழ்நாடு உள்கட்டமைப்பில் முக்கிய மாற்றத்தை (Change) செய்ய முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளார்.
மத்திய அரசின் நிதி உதவியுடன் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து உள்கட்டமைப்புத் திட்டங்களையும் எவ்வித காலதாமதமும் இன்றி விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு விஜய் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவுக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன?

உயர் மட்ட ஆய்வுக் கூட்டம்
தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்த மிக முக்கிய உயர் மட்ட ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
இந்தத் தீவிர ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் (Municipal Administration and Water Supply Department) உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களின் தற்போதைய கள நிலவரங்களைக் கேட்டறிந்த முதலமைச்சர், மத்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் குடிநீர் உள்கட்டமைப்பு, கழிவுநீர் மேலாண்மை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுப் பணிகளைத் திட்டமிடப்பட்ட காலக்கெடுவிற்குள் வேகமாக முடிக்க வேண்டும் என்று விஜய் அறிவுறுத்தினார்.
ரூ.30,000 கோடி உள்கட்டமைப்பு முதலீடு
இந்த உயர் மட்டக் கூட்டத்தின் போது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அர்பன் சேலஞ்ச் ஃபண்ட் (UCF - Urban Challenge Fund) திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் முதல்வரிடம் விரிவாக விளக்கினர்.
மத்திய அரசின் இந்த பிரத்யேக நிதி அமைப்பின் மூலம், தமிழ்நாடு முழுவதும் சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு முதலீடுகளை மிக எளிதாக ஈர்க்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இத்தகைய வாய்ப்பை மிஸ் செய்ய கூடாது என்பதற்காக வேகமாக பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.
வளர்ச்சித் திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தால் மட்டுமே அதன் முழுமையான பொருளாதாரப் பலன்களும், நன்மைகளும் சாமானிய மக்களைச் சென்றடையும் என்பதில் முதலமைச்சர் விஜய் மிக உறுதியாக உள்ளார்.
இத்திட்டங்கள் தள்ளிப்போகும் ஒவ்வொரு நாளும் அதற்கான உள்கட்டமைப்புச் செலவுகள் வீணாக அதிகரிப்பதுடன், மக்களின் வரிப்பணமும் விரயமாவது குறித்து அவர் அதிகாரிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
-
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு -
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
"புரோட்டோகால் முக்கியம்!" சிங்கப்பெண் உடையில் கிண்டல் செய்த கூல் சுரேஷ்.. வலுக்கும் கண்டனம் -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு!












Click it and Unblock the Notifications