நாளை முதல் முறையாக டெல்லி செல்லும் முதல்வர் விஜய்! பயண திட்டம் என்ன? யாரையெல்லாம் சந்திக்கிறார்?
சென்னை: நாளை டெல்லி செல்லும் முதல்வர் விஜய்யின் பயண திட்டம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். எத்தனை நாட்கள் அங்கு தங்கியிருக்கிறார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், நடிகர் விஜய் முதன்முறையாக நாளை டெல்லிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தத் தரைப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.

தமிழகத்தின் மிக முக்கியமான கோரிக்கைகளை முன்வைக்கவுள்ள இந்த டெல்லி பயணத்தின் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
முதல்வராகப் பதவியேற்ற பிறகு பிரதமரைச் சந்திக்கும் இந்த முதல் சந்திப்பில், தமிழகத்தின் வாழ்வாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் விஜய் வலியுறுத்த உள்ளார்.
மேகதாட்டு அணை விவகாரம்: கர்நாடக அரசின் மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்துப் பேச வாய்ப்புள்ளது.
மெட்ரோ ரயில் திட்டம்: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் அடுத்த கட்ட விரிவாக்கப் பணிகளுக்கான ஒப்புதல் மற்றும் நிதி உதவி குறித்தும் பேசுவார்.
கல்வி நிதி ஒதுக்கீடு: தமிழகத்திற்கு வர வேண்டிய பிஎம்ஸ்ரீ (PM-SHRI) கல்வி நிதி ஒதுக்கீட்டை விரைந்து வழங்கக் கோருதல்.
பிரதமர் நரேந்திர மோடி மட்டுமன்றி, மத்திய அமைச்சரவையின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்களையும் முதல்வர் விஜய் சந்திக்க உள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்துத் தமிழகத்திற்கான நிதி மற்றும் பாதுகாப்பு சார்ந்த கோரிக்கைகளை அவர் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசுமுறை சந்திப்புகள் ஒருபுறம் இருக்க, டெல்லியில் உள்ள முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களையும் அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளது.
இவற்றுடன், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) தமிழ்நாடு அரசின் சார்பில் புதிதாக நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதல்வர் விஜய் திறந்து வைக்க உள்ளார்.
நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்படும் முதல்வரின் இந்த முதல் அதிகாரப்பூர்வப் பயணத்திற்கான பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகளைத் தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
டெல்லியில் விஜய் 2 நாட்கள் தங்கியிருப்பாா் என அதிகாாிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நாளை மாலை பிரதமா் மோடி, குடியரசு தலைவா் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரை முதல்வர் விஜய் சந்திக்கிறாா். நாளை மறுநாள் சோனியா காந்தி, ராகுல், பிாியங்கா மற்றும் மத்திய அமைச்சா்களை சந்திப்பாா் என கூறப்படுகிறது.
முன்னதாக கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்காக விஜய், கடந்த ஜனவரி மாதம் 2 முறை ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். அதன் பின்னர் தற்போது 4 மாதங்கள் கழித்து முதல்வராக டெல்லி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications