கிளாம்பாக்கம் ரயில் நிலையம்.. தென் சென்னை மக்களின் ஏக்கம்.. அமைச்சர் சேகர்பாபு முக்கிய அறிவிப்பு
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஓராண்டுகளை கடந்துவிட்ட நிலையில், இன்னமும் மேம்பால பணியும், ரயில் நிலைய பணிகளும் முடியாமல் உள்ளது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை பொறுத்தவரை தமிழக அரசே 20 கோடி ரூபாய் கொடுத்து பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளது. அதன்படி பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் செப்டம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அமைச்சருமான சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தலைநகரம், தென்னிந்தியாவின் மிக முக்கியமான வணிக நகரம், அங்கு பேருந்து நிலையத்தின் எதிரிலேயே ரயில் பாதை போகிறது.. பேருந்து நிலையம் அமைக்கும் போதே, கையோடு ரயில் நிலையமும், மக்கள் சாலையை கடக்க மேம்பாலமும் அமைத்திருக்க வேண்டும். இதை ஒருங்கிணைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக மக்கள் இப்போது ரயில் நிலையம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அதேபோல் ஆபத்தான முறையில் சாலையை கடந்து செல்கிறார்கள்..

ஜிஎஸ்டி சாலை
இந்த சாலை பற்றி கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும்.ஏனெனில் இந்த சாலை தான் தமிழ்நாட்டில் அதிக வாகனங்கள் கடந்து மிகப்பெரிய சாலையாகும். ஜிஎஸ்டி சாலையான இதுதான் சென்னை, திருச்சியின் பிரதான சாலை. 80 சதவீத மக்கள் சென்னைக்குள் நுழையவும், வடமாநிலங்கள் செல்லவும் இந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டும். மிக மிக அதிவேகத்தில் வாகனங்கள் செல்லும் சாலையாகும்.
முக்கியமான இடம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ள இடமும் மிகவும் முக்கியமான இடமாகும். எப்படிப்பட்ட இடம் என்றால், அங்கு தான் ஒரு பக்கம் காஞ்சிபுரம் செல்லும் சாலையும், இன்னொரு பக்கம் ஓஎம்ஆர், ஈசிஆர் சாலையும் இணைக்கிறது. அதேபோல் கனரக வாகனங்கள் அனைத்துமே கிளாம்பாக்கத்தை தாண்டாமல் துறைமுகம் போகவே முடியாது. ஏனெனில் வண்டலூர்-மீஞ்சூர் பைப்பாஸ் அங்குதான் தொடங்குகிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவும் அங்குதான் இருக்கிறது. கிட்டத்தட்ட சென்னையின் முக்கியமான சந்திப்பான இடத்தில் தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
இவ்வளவு முக்கியமான இடத்தில் மேம்பாலங்கள் ஏற்கனவே உள்ளன. ஆனால் சாலையை கடக்க மேம்பாலங்கள் இல்லை.. பேருந்துகள் ஊரப்பாக்கம் அல்லது வண்டலூரில் கடந்து செல்ல வேண்டும்.அங்கு அரசு ஆகாய நடைமேம்பாலம் அமைப்பதாக அறிவித்தது.ஆனால் பணிகள் இன்னும் வேகமெடுக்கவில்லை.. அதேநேரம் ரயில் நிலைய பணிகள் மற்றும் சற்று வேகமாக நடந்து வருகின்றன. வரும் செப்டம்பர் மாதம் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம் என்கிறார் அமைச்சர் சேகர்பாபு.
சேகர்பாபு பேட்டி
வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் திரு.வி.க. நகர் பகுதியில் நடைபெறும் கட்டுமானப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதிய அடிப்படை வசதிகளுடன் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல், செங்கல்பட்டில் பேருந்து நிலையம் தற்போது முழுமையாக உருவாகிக் கொண்டிருக்கிறது. மாமல்லபுரத்தில் புதிய பேருந்து நிலையம் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் என்ன பிரச்சனை
முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகின்றன. அந்த நிலையம் தொடர்பாக வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. இதை விரைவில் தீர்க்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ஒப்புதல் அளித்துதான் முடிச்சூர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் பின் சில காரணங்களை முன்வைத்து அவர்கள் அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர மறுத்துள்ளனர்.
செப்டம்பரில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு
எனினும் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் 2 அல்லது 3 மாதங்களில் திறக்கப்பட்டவுடன் இந்த பிரச்சினைக்கும் ஒரு தீர்வு கிடைக்கும். கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கான ரூ.20 கோடியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமே ஒதுக்கி இருக்கிறது. அந்த பணியும் முடிந்து செப்டம்பர் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்" இவ்வாறு சேகர்பாபு கூறினார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications