Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயணிகளுக்கு பரிசுகளை அள்ளி கொடுத்த சென்னை மெட்ரோ.. சிங்கார சென்னை கார்டு பயண போட்டி இன்னும் இருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி அதிக முறை பயணம் செய்த மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பரிசுகள் வழங்கியுள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து சிங்கார சென்னை அட்டையை உருவாக்கியது. இந்த அட்டையை சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயன்படுத்த முடியும். மேலும், பேருந்து, புறநகர் ரயில் சேவை, சுங்கச் சாவடி, வாகன நிறுத்துமிடம் என பல இடங்களிலும் வாடிக்கையாளர்கள் இந்த அட்டையை பயன்படுத்தலாம்.

CMRL Gives gift prize for Chennai metro train passengers

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில்களில் சிங்கார சென்னை அட்டைகளை பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், டிசம்பர் 15 முதல் மார்ச் 15ஆம் தேதி வரை 3 மாதங்கள் என ஒவ்வொரு மாதமும் அதிகமாக பயணம் செய்யும் முதல் 40 பயணிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசுவழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்திருந்தது.​ அந்தவகையில், டிசம்பர் 15 முதல் ஜனவரி 14 வரையிலான ஒரு மாத காலத்தில் அதிக முறை சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி மெட்ரொ ரயில்களில் பயணித்தவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்துள்ளது மெட்ரோ நிறுவனம்.

இதுதொடர்பாக மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மெட்ரோ ரயில் பயணிகளின் அனுபவங்களை மேம்படுத்துவதற்கும், பல்வேறு முறைகளில் தடையற்ற பயணத்தை எளிதாக்குவதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியின் சிங்கார சென்னை அட்டையோடு (NCMC) சராசரி நிலைக் கட்டணத்தை ஒருங்கிணைத்தது. தேசிய பொது இயக்க அட்டை கட்டண விகிதத்தை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கவும், பயணிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி நிதி உதவியுடன் ஒரு மெகா பரிசு திட்டத்தை அறிவித்தது.

ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் 2024 இல் சிங்கார சென்னை அட்டையை அதிக முறை பயன்படுத்தி பயணம் செய்த மெட்ரோ ரயில் பயணிகளில் தலா 40 பயனர்களை அடையாளம் கண்டு வெகுமதி அளிப்பதை நோக்கமாகக் கொண்டது இந்த முயற்சி. சென்னை திரு.வி.க.பூங்கா, செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், டிசம்பர் 15 முதல் ஜனவரி 14 வரை அதிகமுறை பயணம் செய்த 40 பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பரிசுகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மு.அ. சித்திக், இ.ஆ.ப., வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) ராஜேஷ் சதுர்வேதி, பாரத ஸ்டேட் வங்கியின் துணைப் பொது மேலாளர் (பி&ஓ), பெனுதர் பர்ஹி, மண்டல மேலாளர், பாரத ஸ்டேட் வங்கி., D.C.அஸ்வத் துரை செல்வம், மார்க் மெட்ரோ இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+