"Code F.." சென்னை ஏர்போர்ட்டில் மேஜர் மாற்றம்.. களத்தில் டிஆர்பி ராஜா! இது நடந்தால் எல்லாம் மாறிடும்
சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சில முக்கியமான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. சமீபத்தில் விமான நிலையம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் டிஆர்பி ராஜா கோட் எஃப் சான்றிதழ் குறித்து கோரிக்கை வைத்தார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் முக்கிய விமான நிலையங்களில் ஒன்று சென்னை ஏர்போர்ட். ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் முக்கிய ஏர்போர்ட்டாக சென்னை இருந்தது. ஆனால், இப்போது பெங்களூர் மற்றும் ஹைதராபாத் சென்னைக்கு கடும் போட்டி கொடுக்கிறது.

ஆலோசனைக் கூட்டம்: சென்னை ஏர்போட்டில் இப்போது முக்கியமான வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் சமீபத்தில் மிக முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் சென்னை ஏர்போர்ட் அபிவிருத்தி பணிகள் ஆலோசனை செய்யப்பட்டது.. இதில் சென்னை ஏர்போர்ட் ஆணைய உயர் அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் ஏர்போர்ட் வரும் பயணிகள் மற்றும் சரக்குகள் கையாள எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இப்போது சென்னையில் 3 முனையங்கள் உள்ள நிலையில், கூடுதலாக ஒரு முனையத்தைச் சரக்கு போக்குவதிற்கு மட்டும் கையாள பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ஏன் முக்கியம்: அது எந்தவொரு ஏர்போர்ட்டிற்கும் சரக்கு சேவை மூலம் அதிக வருவாய் கிடைக்கும். அதிலும் சென்னை ஏர்போர்ட் முக்கியமான மத்திய கிழக்கு நாடுகளையும் தெற்காசிய நாடுகளையும் இணைக்கும் இடத்தில் உள்ளது. இதனால் சரக்கு சேவை மூலம் அதிக வருவாய் ஈட்ட முடியும். இருப்பினும், இப்போது இட நெருக்கடியால் இந்த சரக்கு சேவை பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையத்திற்குச் செல்கிறது. அதை மீண்டும் சென்னைக்குக் கொண்டு வரவே சரக்கு சேவைக்குத் தனியாக முனையம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இது தவிரச் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேரடியாகத் தேசிய நெடுஞ்சாலை 32க்கு இணைப்பு சாலை அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதுபோல சாலை அமைத்தால் அது மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க உதவும் என்பதால் இந்தத் திட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
கோட் எஃப்: இந்தக் கூட்டத்தில் சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து டெவலப்மேண்ட் பணிகளுக்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா உறுதியளித்தார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் டிஆர்பி ராஜா வலியுறுத்தியது ஒரு விஷயத்தைத் தான். அதாவது சென்னை விமான நிலையத்திற்கு கோட் எஃப் சர்டிபிக்கேட் வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கோட் எஃப் என்பது மிகப் பெரிய பயணிகள் விமானங்களைக் கையாள முடியும் என்று ஒரு விமான நிலையத்திற்கு அளிக்கப்படும் சான்றிதழ் ஆகும். அந்த விமானங்களின் இறக்கை அளவு 65 முதல் 80 மீட்டர் வரை இருக்கும் என்பதால் அந்தளவுக்கு விமான நிலையத்தின் ஓடுபாதையும் வந்து நிற்கும் இடங்களும் பெரிதாக இருந்தால் மட்டுமே இந்த சான்றிதழ் வழங்கப்படும். இந்தியாவில் ஹைதராபாத் உள்ளிட்ட ஓரிரு விமான நிலையங்களுக்கு மட்டுமே இந்த சான்றிதழ் உள்ளது.
நம்பிக்கை: சென்னை விமான நிலையத்தை இந்த பெரிய விமானங்களைக் கையாளும் வகையில் மாற்றி அமைத்து, இந்த சான்றிதழைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் டிஆர்பி ராஜா வலியுறுத்தினார். இது சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்க உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications