பயணிகள் எதிர்பார்ப்பு நிறைவேறியது! கோவை - பெங்களூர் வந்தே பாரத்.. புறப்படும் நேரம் மாற்றம்.. ரயில்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் கோவையில் இருந்து காலை 5 மணிக்கே புறப்படுவதால் பயண நேரத்தை மாற்றுமாறு தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று, கோவையில் இருந்து காலை 5 மணிக்கு கிளம்புவதற்கு பதிலாக காலை 7 மணி 25 நிமிடங்களுக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதி நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்ய ரயில்வே நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை - கோவை, சென்னை - மைசூரு, சென்னை - நெல்லை என முன்று வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி முதல் கோவை - பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

Coimbatore - Bangalore Vande Bharat train departure time change, Southern Railway

இதன் காரணமாக தமிழ்நாட்டில் 4 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில், கோவை - பெங்களூர் வந்தே பாரத் ரயிலானது தினமும் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 11.30 மணிக்கு பெங்களூர் சென்றடைகிறது. பின்னர் பெங்களூரில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு கோவை வந்தடைகிறது.

இந்த வந்தே பாரத் ரயிலில் 478 ஏசி சேர் கார்கள் இருக்கைகளாக உள்ளன. இந்த ஏசி சேர் கார் கட்டணம் பெங்களூருக்கு 1025 ரூபாய் ஆக உள்ளது. 52 எக்ஸிகியூட்டிவ் சேர் கார்கள் உள்ளது. இதற்கு கட்டணமாக 1930 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கோவை பெங்களூர் வந்தே பாரத் ரயில் கோவையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படுவதால் பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

ஏற்கனவே காலை 6 மணிக்கு உதய் எக்ஸ்பிரஸ் செல்லும் நிலையில் வந்தே பாரத் ரயிலை இயக்கினால் அதிகாலை ஐந்து மணிக்கு இயக்கினால் மக்கள் எப்படி பஸ்களை அல்லது ஆட்டோவை பிடித்து எப்படி வருவார்கள் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று பயண நேரத்தை மாற்றி அமைக்க ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வண்டி எண் 20642 / 20641 கோவையில் இருந்து பெங்களூரு காண்ட் வரை செல்லும் வந்தே பாரத் ரயில், காலை 5 மணிக்கு கிளம்புவதற்கு பதிலாக காலை 7 மணி 25 நிமிடங்களுக்கு புறப்படும்.

இந்த ரயில், திருப்பூருக்கு காலை 8.03 மணிக்கு வரும். 8.05 மணிக்கு புறப்பட்டு திருப்பூரில் இருந்து புறப்பட்டு சேலத்திற்கு 9. 32 மணிக்கும், தர்மபுரிக்கு 10. 51 மணிக்கும் ஓசூருக்கு மதியம் 12. 03 மணிக்கும் பெங்களூர் காண்டிற்கு பிற்பகல் 1 மணி 50 நிமிடங்களில் சென்றடையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+